முகநூலில் முகமது நபிகள் பற்றி அவதூறு: திருப்பூர் பாஜக நிர்வாகி கைது

கோவை சைபர் கிரைம் போலீசார் திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் பகுதியைச் சேர்ந்த பாஜக ஊடகப் பிரிவு மண்டல தலைவரை முகநூலில் முகமது நபிகள் பற்றி அவதூறு பரப்பியதற்காக கைது செய்தனர்.



கோவை: கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் பகுதியைச் சேர்ந்த பாஜக ஊடகப் பிரிவு மண்டல தலைவரை முகநூலில் முகமது நபிகள் பற்றி அவதூறு பரப்பியதற்காக கைது செய்தனர்.

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணனிடம் ஜூலை 19 அன்று தமுமுக கோவை மத்திய மாவட்டத் தலைவர் சர்புதீன் மற்றும் கட்சி நிர்வாகிகள் புகார் மனு அளித்தனர். அதில், "குன்னத்தூர் முதல்வர்" என்ற முகநூல் கணக்கில் இஸ்லாமியர்கள் உயிருக்கும் மேலாக மதிக்கின்ற முகமது நபிகள் (ஸல்) பற்றியும், இஸ்லாமிய தலைவர்கள் பற்றியும் கொச்சையாகவும் கீழ்த்தரமாகவும் பதிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்தப் பதிவுகளை வெளியிட்டவரைக் கைது செய்து சிறையில் அடைத்து, உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்றும் புகாரில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவதூறு பதிவுகளை வெளியிட்டவர் திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் பகுதியைச் சேர்ந்த பாஜக ஊடகப் பிரிவு மண்டல தலைவர் நந்தகுமார் (32) என்பது தெரியவந்தது.

நேற்று மாலை, கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் நந்தகுமாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து, அவரைக் கைது செய்தனர்.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...