முகநூலில் முகமது நபிகள் பற்றி அவதூறு: திருப்பூர் பாஜக நிர்வாகி கைது

கோவை சைபர் கிரைம் போலீசார் திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் பகுதியைச் சேர்ந்த பாஜக ஊடகப் பிரிவு மண்டல தலைவரை முகநூலில் முகமது நபிகள் பற்றி அவதூறு பரப்பியதற்காக கைது செய்தனர்.



கோவை: கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் பகுதியைச் சேர்ந்த பாஜக ஊடகப் பிரிவு மண்டல தலைவரை முகநூலில் முகமது நபிகள் பற்றி அவதூறு பரப்பியதற்காக கைது செய்தனர்.

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணனிடம் ஜூலை 19 அன்று தமுமுக கோவை மத்திய மாவட்டத் தலைவர் சர்புதீன் மற்றும் கட்சி நிர்வாகிகள் புகார் மனு அளித்தனர். அதில், "குன்னத்தூர் முதல்வர்" என்ற முகநூல் கணக்கில் இஸ்லாமியர்கள் உயிருக்கும் மேலாக மதிக்கின்ற முகமது நபிகள் (ஸல்) பற்றியும், இஸ்லாமிய தலைவர்கள் பற்றியும் கொச்சையாகவும் கீழ்த்தரமாகவும் பதிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்தப் பதிவுகளை வெளியிட்டவரைக் கைது செய்து சிறையில் அடைத்து, உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்றும் புகாரில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவதூறு பதிவுகளை வெளியிட்டவர் திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் பகுதியைச் சேர்ந்த பாஜக ஊடகப் பிரிவு மண்டல தலைவர் நந்தகுமார் (32) என்பது தெரியவந்தது.

நேற்று மாலை, கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் நந்தகுமாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து, அவரைக் கைது செய்தனர்.

Newsletter

கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பரப்புரை..!

NDA ஆட்சி அமைந்தால், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை போன்று தமிழகத்திலும் நிலைமை உரு...

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...