பொள்ளாச்சி அருகே கோழிப் பண்ணை இடிந்து விபத்து: ஒருவர் பலி, 4 பேர் காயம்

பொள்ளாச்சி அருகே கெங்கம்பாளையத்தில் கனமழை காரணமாக கோழிப் பண்ணை இடிந்து விழுந்தது. இதில் வடமாநிலத்தைச் சேர்ந்த பெண் தொழிலாளி உயிரிழந்தார், மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர்.


கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள கெங்கம்பாளையம் பகுதியில் கனமழை காரணமாக கோழிப் பண்ணை இடிந்து விழுந்த விபத்தில் வடமாநிலத்தைச் சேர்ந்த பெண் தொழிலாளி உயிரிழந்தார். மேலும் 4 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள பொள்ளாச்சி, வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராமப்புறங்களில் இன்று பலத்த காற்றுடன் மழை பெய்தது.

இதன் காரணமாக பொள்ளாச்சி அருகே உள்ள கெங்கம்பாளையம் பகுதியில் முருகானந்தம் என்பவர் நடத்தி வரும் கோழிப் பண்ணை இடிந்து விழுந்தது.



இந்த கோழிப் பண்ணையில் வடமாநில தொழிலாளர்கள் 5 பேர் வேலை செய்து வந்தனர். பலத்த காற்றுடன் பெய்த மழையின் காரணமாக கோழிப் பண்ணை சரிந்து விழுந்ததில், கோழிப் பண்ணையின் உரிமையாளர் முருகானந்தம் மற்றும் வடமாநில தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கினர்.



இந்த விபத்தில் வடமாநிலத்தைச் சேர்ந்த மெமதாசிங் (33) என்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.



படுகாயம் அடைந்த முருகானந்தம் (45), ரேவதி (40), ரவிசிங் (46), கொனாமிகா (20) ஆகிய நான்கு பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



இந்த சம்பவம் குறித்து கோட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...