அட்டகட்டியில் கோவை மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையிலான மனுநீதிநாள் முகாம் நடைபெற்றது

வால்பாறை வட்டம், அட்டகட்டி அரசு மேல் நிலைப்பள்ளியில் கோவை மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையிலான மனுநீதிநாள் முகாம் நடைபெற்றது. இந்நிகழ்வின் ஒரு பகுதியாக ஒவ்வொறு துறை தொடர்பாக பொதுமக்கள் அரிந்திடும் வகையில் கண்காட்சி அரங்கங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் ஏராளமான பயனாளிகள் கலந்து கொண்டு மனுக்களை வழங்கினர். 



முகாமில் பொள்ளாச்சி சார் ஆட்சியர், வால்பாறை சட்டமன்ற உறுப்பினர், கோவை மாவட்ட தொழிலாளர் துணை ஆணையர், வால்பாறை காவல் துணை கண்காணிப்பாளர், கோவை மாவட்ட சுகாதார பணிகள் துறை இணை இயக்குநர், கோவை வேளாண்மை துறை மற்றும் தோட்ட கலைத்துறை இணை இயக்குநர், வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குநர், வால்பாறை மற்றும் மானாம்பள்ளி வனச்சரக அலுவலர்,



முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட மாற்றுத்திரணாளிகள் நல அலுவலர், சமூக நல அலுவலர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர், பிற்பட்டோர் நலத்துறை மற்றும் சிறுபாண்மையினர் நல அலுவலகம், மாவட்ட வழங்கல் அலுவலர், தனித்துணை ஆட்சியர், வால்பாறை நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர், பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலர், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கோட்ட மேலாளர், வால்பாறை காவல் ஆய்வாளர், வால்பாறை வட்டாட்சியர் பாஸ்கரன் உள்ளிட்ட பல்வேறு துறையினைச் சார்ந்த அலுவலர்கள், அதிகாரிகள் இம்முகாமில் பங்கேற்றனர்.



இதில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் வரவேற்புரை ஆற்றினார். இதனைத்தொடர்ந்து, வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரிவாசு சிறப்புரை ஆற்றினார். வருவாய்த்துறை அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையுரை ஆற்றி அரசு நலத்திட்டங்களை வழங்கினார்.



முகாமில் பழங்குடியின மக்களுக்கு சான்றுகள், மின்னணு குடும்ப அட்டை மற்றும் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது. முகாமின் இறுதியில் வால்பறை வட்டாட்சியர் நன்றியுரை ஆற்றினார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...