கோவை மேட்டுப்பாளையம் அருகே மாவோயிஸ்ட் நடமாட்டத்தை தடுக்க தீவிர வாகன சோதனை

கோவை மேட்டுப்பாளையம் அருகே தமிழக-கேரள எல்லையோர வனப்பகுதியில் மாவோயிஸ்ட் நடமாட்டத்தை தடுக்க காவல்துறை மற்றும் வனத்துறையினர் இணைந்து தீவிர வாகன சோதனை நடத்துகின்றனர். சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே கேரள மாநில எல்லையான முள்ளி வனப்பகுதியில் காவல்துறை மற்றும் வனத்துறையினர் இணைந்து மாவோயிஸ்ட்கள் பதுங்கியுள்ளனரா மற்றும் நடமாட்டம் உள்ளதா என தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். முள்ளி வழியே உள்ளூர் பழங்குடியின மக்களை தவிர பிறர் கேரளாவிற்குள் நுழையவும் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோவை, மேட்டுப்பாளையத்தில் இருந்து பில்லூர் அணை செல்லும் மலைப்பாதையில் கேரள எல்லையோரம் முள்ளி வனப்பகுதி அமைந்துள்ளது. இங்கு ஏற்கனவே வனத்துறை சோதனை சாவடி உள்ளது. இச்சோதனை சாவடியை கடந்து பில்லூர் அணைப்பகுதி மற்றும் கேரள பகுதிகள் செல்லும் வாகனங்கள் தற்போது கண்காணிக்கப்பட்டு வருகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு மேட்டுப்பாளையம்-கோத்தகிரி மலைப்பாதை தடுப்பு சுவர்களில் எழுதப்பட்டிருந்த தேச விரோத கருத்துக்கள் மற்றும் தமிழக எல்லையோரம் உள்ள கேரள வனப்பகுதி மலைக்கிராமங்களில் ஒட்டப்பட்டிருந்த தேர்தல் புறக்கணிப்பு போஸ்டர்கள் உள்ளிட்ட சம்பவங்களில் மாவோயிஸ்ட்கள் தொடர்பு இருக்கலாம் என நக்சல் தடுப்பு போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், முள்ளி சோதனை சாவடியில் வாகன சோதனை தீவிரப்படுத்தப் பட்டுள்ளது. முள்ளி வழியே சுமார் முந்நூறு மீட்டர் தொலைவு மட்டுமே உள்ள கேரள பகுதிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின மற்றும் உள்ளூர் மக்கள் மட்டுமே தகுந்த ஆவணங்களை காட்டி கடந்து செல்ல முடியும்.

மேலும் இவ்வழியே பில்லூர் அணை பகுதிக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு பின்பே அனுமதிக்கப்பட்டு வருகிறது. தமிழக மற்றும் கேரள அரசால் தேடப்பட்டு வரும் மாவோயிஸ்ட்களின் புகைப்படங்கள் அடங்கிய போஸ்டர்கள் முள்ளி சோதனை சாவடி பகுதியில் ஒட்டப்பட்டு தற்போது கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...