கோவை பேருந்தில் மூதாட்டியின் 5 பவுன் நகை மற்றும் பணம் திருடப்பட்டது

கோவையில் அரசு பேருந்தில் பயணித்த 67 வயது மூதாட்டியின் 5 பவுன் தங்க நகை மற்றும் ரூ.3000 பணம் திருடப்பட்டது. சுந்தராபுரம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.


கோவை: கோவை ஈச்சனாரி அருகே உள்ள ஸ்ரீராம் நகரைச் சேர்ந்த ஆறுமுகத்தின் மனைவி தனலட்சுமி (67) என்ற மூதாட்டியிடமிருந்து அரசு பேருந்தில் 5 பவுன் தங்க நகை மற்றும் ரூ.3000 பணம் திருடப்பட்டுள்ளது.

நேற்று (ஜூலை 19) தனது மகள் வீட்டிற்குச் செல்வதற்காக ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் இருந்து அரசு நகர பேருந்தில் ஏறி சுந்தராபுரம் வந்து கொண்டிருந்தார் தனலட்சுமி. மகள் வீட்டை அடைந்த பின்னர், தனது கையப்பையில் வைத்திருந்த பணப்பையைக் காணவில்லை என்பதை உணர்ந்தார். அந்தப் பணப்பையில் 5 பவுன் எடையுள்ள தங்கச் சங்கிலியும், ரூ.3000 பணமும் இருந்தது.

பேருந்தில் பயணம் செய்யும் போது திருட்டு நடந்திருக்கலாம் என்று சந்தேகித்த தனலட்சுமி, இது குறித்து சுந்தராபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், சப்-இன்ஸ்பெக்டர் ஞானபிரகாஷ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Newsletter

கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பரப்புரை..!

NDA ஆட்சி அமைந்தால், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை போன்று தமிழகத்திலும் நிலைமை உரு...

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...