கோவை பேருந்தில் மூதாட்டியின் 5 பவுன் நகை மற்றும் பணம் திருடப்பட்டது

கோவையில் அரசு பேருந்தில் பயணித்த 67 வயது மூதாட்டியின் 5 பவுன் தங்க நகை மற்றும் ரூ.3000 பணம் திருடப்பட்டது. சுந்தராபுரம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.


கோவை: கோவை ஈச்சனாரி அருகே உள்ள ஸ்ரீராம் நகரைச் சேர்ந்த ஆறுமுகத்தின் மனைவி தனலட்சுமி (67) என்ற மூதாட்டியிடமிருந்து அரசு பேருந்தில் 5 பவுன் தங்க நகை மற்றும் ரூ.3000 பணம் திருடப்பட்டுள்ளது.

நேற்று (ஜூலை 19) தனது மகள் வீட்டிற்குச் செல்வதற்காக ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் இருந்து அரசு நகர பேருந்தில் ஏறி சுந்தராபுரம் வந்து கொண்டிருந்தார் தனலட்சுமி. மகள் வீட்டை அடைந்த பின்னர், தனது கையப்பையில் வைத்திருந்த பணப்பையைக் காணவில்லை என்பதை உணர்ந்தார். அந்தப் பணப்பையில் 5 பவுன் எடையுள்ள தங்கச் சங்கிலியும், ரூ.3000 பணமும் இருந்தது.

பேருந்தில் பயணம் செய்யும் போது திருட்டு நடந்திருக்கலாம் என்று சந்தேகித்த தனலட்சுமி, இது குறித்து சுந்தராபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், சப்-இன்ஸ்பெக்டர் ஞானபிரகாஷ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...