உடுமலைப்பேட்டை: அமராவதி அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் வெள்ளப்பெருக்கு - மலைவாழ் மக்கள் அவதி

உடுமலைப்பேட்டை அருகே அமராவதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான கூட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மலைவாழ் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களது அத்தியாவசிய தேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமராவதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான பாம்பாறு, தூவானம், மறையூர், காந்தளூர், கூட்டாறு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது.

கூட்டாறு வழியாக தளிஞ்சி, தளிஞ்சி வயல், கீழான வயல், மஞ்சம்பட்டி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மலைவாழ் குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் பல ஆண்டுகளாக இப்பகுதியில் வசித்து வருகின்றனர்.



தற்போது, கடந்த சில நாட்களாக கூட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால், அத்தியாவசிய தேவைகள் மற்றும் அவசரகால சிகிச்சைக்கு கூட மலைவாழ் மக்கள் சமவெளிப் பகுதிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.



மேலும், தற்போது சிறு படகு மூலம் கூட்டாற்றைக் கடக்க வேண்டிய அபாயகரமான சூழலுக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். நீர்மட்டம் மேலும் உயரும் போது விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

பல ஆண்டுகளாக மழைக்காலங்களில் மலைவாழ் மக்கள் அவதிப்படும் நிலையில், கூட்டாற்றைக் கடக்க மரப்பாலம் அமைத்து தர வேண்டும் என்ற அவர்களது கோரிக்கை நிறைவேற்றப்படாமல் கிடப்பில் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூட்டாறு பகுதியில் ஆய்வு செய்து, தற்காலிக மரப்பாலம் அமைத்து தர வேண்டும் என மலைவாழ் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.



இதற்கிடையே, அமராவதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால், வினாடிக்கு 2,800 கன அடி நீர் வரத்து உள்ளது.



அணையின் பாதுகாப்பு கருதி மதகுகள் வழியாக 2,325 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்சமயம் அமராவதி அணையின் நீர்மட்டம் 90 அடி கொள்ளளவில் 88.19 அடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தக்காளி மற்றும் கற்றாழை மதிப்பூட்டல் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோவையில் தக்காளி மற்றும் கற்றாழையிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் இரண...

மலுமிச்சம்பட்டி அரசு இசைக் கல்லூரியில் பட்டம், பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மலுமிச்சம்பட்டி தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில் உள்ளிட்...

மலுமிச்சம்பட்டி அரசு இசைக் கல்லூரியில் பட்டம், பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மலுமிச்சம்பட்டி தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில் உள்ளிட்...

GKNM மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம்: விருதுகள் வழங்கி கௌரவிப்பு

GKNM மருத்துவமனையில் மே 15 அன்று சர்வதேச செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது. செவிலியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தொழில்சார்...

கிணத்துக்கடவு அருகே கொலை வழக்கில் சிறுவனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை..!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே நடைபெற்ற கொலை வழக்கை விசாரித்த இளஞ்சிறார் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட சிறுவனுக்கு...

AIADMK முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் A. சண்முகம் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்

கோவை புறநகர் தெற்கு மாவட்டம் மதுக்கரை ஒன்றிய AIADMK செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A. சண்முகம் அமைச்சர்...