கோவையில் முக்கனி மனிதநேய அறக்கட்டளை 12வது ஆண்டு நல்லிணக்க விழாவில் மாற்றுத்திறனாளிகள், முதியோர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியது. சமூக ஆர்வலர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதுகளும் வழங்கப்பட்டன.
Coimbatore: கோவையில் முக்கனி மனிதநேய அறக்கட்டளை சார்பாக 12 ஆம் ஆண்டு நல்லிணக்க விழா சுகுணாபுரம் பகுதியில் உள்ள ரெயின்போ காலனியில் நடைபெற்றது. முக்கனி மனிதநேய அறக்கட்டளையின் நிறுவனர் O.இஸ்மாயில் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அறக்கட்டளையின் நிர்வாகிகள் பலரும் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் பல்வேறு பகுதிகளில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள், பார்வையற்றோர், மனநலம் பாதிக்கப்பட்டோர், முதியோர் உள்ளிட்ட பல்வேறு குடும்பத்தினருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

15 நபர்களுக்கு தையல் மிஷின்கள், பார்வையற்றவர்களுக்கு நவீன கைக்குச்சிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள்கள், அரிசி, மளிகை பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, தன்னலம் பாராமல் பணியாற்றிவரும் சிறந்த சமூக ஆர்வலர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
விழாவின் ஒரு பகுதியாக, தமிழர் பாரம்பரிய பறை இசை, சிலம்பாட்டம், நடனம் உள்ளிட்ட பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இந்த நிகழ்வு மூலம் முக்கனி அறக்கட்டளை சமூகத்தின் பல்வேறு பிரிவினருக்கும் உதவி செய்வதோடு, தமிழர் கலாச்சாரத்தையும் போற்றி வளர்க்கும் வகையில் அமைந்தது குறிப்பிடத்தக்கது.
நிகழ்ச்சியில் பல்வேறு பகுதிகளில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள், பார்வையற்றோர், மனநலம் பாதிக்கப்பட்டோர், முதியோர் உள்ளிட்ட பல்வேறு குடும்பத்தினருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
15 நபர்களுக்கு தையல் மிஷின்கள், பார்வையற்றவர்களுக்கு நவீன கைக்குச்சிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள்கள், அரிசி, மளிகை பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, தன்னலம் பாராமல் பணியாற்றிவரும் சிறந்த சமூக ஆர்வலர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
விழாவின் ஒரு பகுதியாக, தமிழர் பாரம்பரிய பறை இசை, சிலம்பாட்டம், நடனம் உள்ளிட்ட பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இந்த நிகழ்வு மூலம் முக்கனி அறக்கட்டளை சமூகத்தின் பல்வேறு பிரிவினருக்கும் உதவி செய்வதோடு, தமிழர் கலாச்சாரத்தையும் போற்றி வளர்க்கும் வகையில் அமைந்தது குறிப்பிடத்தக்கது.