கோவையில் முக்கனி அறக்கட்டளை 100க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியது

கோவையில் முக்கனி மனிதநேய அறக்கட்டளை 12வது ஆண்டு நல்லிணக்க விழாவில் மாற்றுத்திறனாளிகள், முதியோர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியது. சமூக ஆர்வலர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதுகளும் வழங்கப்பட்டன.


Coimbatore: கோவையில் முக்கனி மனிதநேய அறக்கட்டளை சார்பாக 12 ஆம் ஆண்டு நல்லிணக்க விழா சுகுணாபுரம் பகுதியில் உள்ள ரெயின்போ காலனியில் நடைபெற்றது. முக்கனி மனிதநேய அறக்கட்டளையின் நிறுவனர் O.இஸ்மாயில் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அறக்கட்டளையின் நிர்வாகிகள் பலரும் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் பல்வேறு பகுதிகளில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள், பார்வையற்றோர், மனநலம் பாதிக்கப்பட்டோர், முதியோர் உள்ளிட்ட பல்வேறு குடும்பத்தினருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.



15 நபர்களுக்கு தையல் மிஷின்கள், பார்வையற்றவர்களுக்கு நவீன கைக்குச்சிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள்கள், அரிசி, மளிகை பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, தன்னலம் பாராமல் பணியாற்றிவரும் சிறந்த சமூக ஆர்வலர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

விழாவின் ஒரு பகுதியாக, தமிழர் பாரம்பரிய பறை இசை, சிலம்பாட்டம், நடனம் உள்ளிட்ட பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இந்த நிகழ்வு மூலம் முக்கனி அறக்கட்டளை சமூகத்தின் பல்வேறு பிரிவினருக்கும் உதவி செய்வதோடு, தமிழர் கலாச்சாரத்தையும் போற்றி வளர்க்கும் வகையில் அமைந்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...