பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் 4ஜி மற்றும் 5ஜி சேவைகளை தொடங்கக் கோரி DYFI அமைப்பினர் போராட்டம்

கோவையில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு DYFI அமைப்பினர் 4ஜி மற்றும் 5ஜி சேவைகளை உடனடியாக தொடங்கக் கோரி போராட்டம் நடத்தினர். மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.


Coimbatore: கோவையில் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் 4ஜி மற்றும் 5ஜி சேவைகளை உடனடியாக தொடங்கக் கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) சார்பில் போராட்டம் நடைபெற்றது. கோவை பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.

DYFI கோவை மாவட்டச் செயலாளர் அர்ஜுன் கூறுகையில், "ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களின் விலை உயர்வுக்குப் பின்பு, சுமார் 80 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பி.எஸ்.என்.எல். சேவைக்கு மாறியுள்ளனர். ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் வழங்கும் 900 ரூபாய் பேக்கேஜை பி.எஸ்.என்.எல். 400 ரூபாய்க்கு வழங்க முடியும். ஆனால், இன்றுவரை பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு 4ஜி மற்றும் 5ஜி சேவைகள் வழங்கப்படவில்லை" என்று தெரிவித்தார்.



மேலும் அவர், "நீண்டகால போராட்டத்திற்குப் பிறகு சென்னையில் உள்ள ஒரு கிராமத்தில் மட்டுமே பி.எஸ்.என்.எல். 4ஜி டவர் நிறுவப்பட்டுள்ளது. தற்போது டாடா நிறுவனத்திடம் இதற்கான டெண்டர் விடப்பட்டுள்ளது. அரசால் செய்ய முடியாததை தனியார் செய்ய முடியும் என்று அரசு கருதினால், இந்த அரசு மக்களுக்கானதா அல்லது தனியாருக்கானதா என்ற கேள்வி எழுகிறது" என்றார்.



"தனியாருக்கு டெண்டர் விடுவதை தவிர்த்து, அரசே அதற்கான நடவடிக்கை எடுத்து மக்களுக்கு தீர்வு காண வேண்டும். பொதுத்துறையை பாதுகாக்க வேண்டும். உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால், நாடு முழுவதும் DYFI சார்பில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும்" என்று அர்ஜுன் எச்சரித்தார்.

Newsletter

கோவை தெற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுணன் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை தெற்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுணன் 63-வது வார்டு இராமநாதபுரம் மற்றும் ஒலாம்பஸ் பகுதிகளில் வீடு வீடா...

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொள்ளாச்சி வேட்பாளருக்கு கட்சிப் பெயரே பயன்படுத்த முடியாத நிலை - அண்ணாமலை விமர்சனம்

பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமனை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தி...

பொள்ளாச்சியில் கூட்டணி வேட்பாளர் நித்யானந்தன் பொதுமக்களுடன் கலந்துரையாடல்

பொள்ளாச்சி வாணியர் சேவா சங்க வளாகத்தில் கூட்டணி வேட்பாளர் நித்யானந்தன் பொதுமக்களுடன் சிறப்பு கலந்துரையாடல் நடத்தினார். ப...

கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பரப்புரை..!

NDA ஆட்சி அமைந்தால், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை போன்று தமிழகத்திலும் நிலைமை உரு...

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...