குடிநீர் இணைப்புகளில் மோட்டார் பொருத்தி குடிநீர் எடுத்தால் கடும்நடவடிக்கை- கோவை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை


கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலம் வார்டு எண்களான 94, 95, 96, 97, 98, 99 மற்றும் 100க்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் இணைப்புகளில் மின் மோட்டார்கள் பொருத்தி குடிநீர் எடுக்கப்படும் மின்மோட்டார் பறிமுதல் செய்து, குடிநீர் குழாய் இணைப்பு துண்டிக்கப்படும் என கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் இன்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து, மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் தெரிவிக்கையில், “கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்களான 94, 95, 96, 97, 98, 99 மற்றும் 100க்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் செய்யும் போது வீட்டுக் குடிநீர் இணைப்புதாரர்கள் தங்களது குடிநீர் இணைப்புகளில் நேரடியாக மின்மோட்டார் பொருத்தி குடிநீர் உறிஞ்சி எடுத்து வருகின்றனர்.

மின்மோட்டார் பொருத்தி குடிநீர் எடுக்க வேண்டாம் என இணைப்புதாரர்களிடம் பலமுறை நேரில் எச்சரித்தும் தொடர்ந்து மின் மோட்டார் பொருத்தி குடிநீர் உறிஞ்சி எடுத்து வருகின்றனர்.

எனவே குடிநீர் இணைப்புகளில் நேரடியாக மின் மோட்டார் பொருத்தி குடிநீர் உறிஞ்சி எடுத்தால் மின்மோட்டார் பறிமுதல் செய்யப்பட்டு, மாநகராட்சி சட்ட விதிகளுக்குட்பட்டு குடிநீர் குழாய் இணைப்பு துண்டிக்கப்படும்.

எனவே, பொது மக்கள் குடிநீர் குழாய் இணைப்புகளில் நேரடியாக மின்மோட்டார் பொருத்தாதவாறு போதுமான ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.” இவ்வாறு மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...