ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர் சார்பில் அரசுப் பள்ளியில் புதிய கழிப்பறை கட்டிடம் திறப்பு


ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் ஷேன் டியகோ டௌவுன்டவுன் பிரேக்பாஸ்ட், யுஎஸ்ஏ சார்பில் சுவட்ச் பாரத் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளுக்கு கழிப்பறை வசதி கட்டப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று கோவை, அசோகபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளயில் கழிப்பறை கட்டப்பட்டு அதனை கோவை ரோட்டரி கிளப் மாவட்ட ஆளுநர் பிரகாஷ் சந்திரன் திறந்து வைத்தார்.

இது குறித்து ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர் செயலாளர் ராம்குமார் கூறுகையில்; உலகளாவிய மானியத்தின் கீழ் அரசு பள்ளிகளுக்கு கழிப்பறை திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இதற்கு ரோட்டரி இன்டெர்நேஷ்னல் தலைமையகம் மூலம் 50 சதவீதம் நிதி வழங்கப்பட்டது. இதுவரை ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர் சார்பில் 10 அரசுப் பள்ளிகளுக்கு 65 லட்சம் செலவில் கழிப்பறை வசதி கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. கழிப்பறை வசதிக்கு முழுமையாக தண்ணீர் வசதி போன்றவை செய்து கொடுக்கப்பட்டுள்ளது.



இதனை பராமரிப்பு மற்றும் மேற்பார்வையிட ஒவ்வொரு மாதமும் ரோட்டரி குழு உறுப்பினர்கள் ஆய்வு செய்ய ஏற்பாடு செய்யப்படவுள்ளது. அதன்பிறகு பி.எஸ்.ஜி மருத்துவமனையின் மருத்துவர்கள் இந்த பள்ளி கூடங்களுக்கும் சென்று மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்பு எடுக்க முடுவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், இதுபோன்ற திட்டங்களுக்கு ரோட்டரி இன்டெர்நேஷ்னல் தலைமையகம் உதவி வருகிறது. அவர்களுக்கு இந்த திட்டத்தை பற்றிய தகவல் 6 மாதத்திற்கு ஒருமுறை ரிப்போர்ட் அனுப்பும் வகையில் 5 ஆண்டுகளுக்கு இந்த கழிப்பறை வசதிகள் பராமரிக்கப்பட்டு வரும். இதுபோன்ற திட்டங்களுக்கு பள்ளிகளில் இருந்தும் மிகுந்த ஆதரவு கிடைக்கிறது என்றார்.



இதில், ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர் தலைவர் குரூப்தீப் சிங், உதவி ஆளுநர் மாரப்பன், ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர் உறுப்பினர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...