கோவையில் மூதாட்டி தன்னை கருணை கொலை செய்ய அனுமதி கோரி ஆட்சியரிடம் மனு

கோவையில் 70 வயது மூதாட்டி வசந்தா, நகை மோசடி வழக்கில் போலீஸ் நடவடிக்கை எடுக்காததால் கருணை கொலை அல்லது தற்கொலைக்கு அனுமதி கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.


Coimbatore: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், 70 வயதான மூதாட்டி வசந்தா என்பவர் தன்னை கருணை கொலை அல்லது தற்கொலை செய்ய அனுமதிக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

கோயம்புத்தூர் கே.ஜி. போஸ் நகரைச் சேர்ந்த வசந்தா, தனது மனுவில் கூறியிருப்பதாவது: "விமலா கீர்த்தி உள்ளிட்ட நான்கு பேர் சேர்ந்து என்னிடமிருந்து 14 பவுன் நகை வாங்கி மோசடி செய்தனர். இது குறித்து சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். வழக்கு பதிவு செய்யப்பட்டாலும், முறையான விசாரணை நடத்தாமல் குற்றவாளிகளை தப்பிக்க வைக்க முயற்சி நடக்கிறது."

"குற்றவாளிகளுக்கு சாதகமாக குற்றப்பத்திரிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு உடந்தையாக உள்ள காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தேன். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை," என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர், "மாநகர காவல் ஆணையர் சிங்காநல்லூர் காவல் நிலைய அதிகாரிகளை நேரில் அழைத்து எச்சரிக்கை செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட பின்னரும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இனி எனக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை. எனவே, என்னை கருணை கொலை அல்லது தற்கொலை செய்ய அனுமதிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட வேண்டும்," என்று தனது மனுவில் கோரியுள்ளார்.

இந்த சம்பவம் கோவை நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக ஆர்வலர்கள் இது போன்ற சம்பவங்கள் தடுக்கப்பட வேண்டும் என்றும், முதியோர்களுக்கு உரிய பாதுகாப்பும் நீதியும் வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...

விஷு பண்டிகைக்கு கோவையில் இருந்து 5 நாட்களில் 15 டன் காய்கறி,பழங்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி

மலையாள புத்தாண்டு விஷு பண்டிகை முன்னிட்டு கோவை விமான நிலையத்திலிருந்து கடந்த 5 நாட்களில் 15 டன் எடை கொண்ட காய்கறிகள் மற்...

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில்  கொடி அணிவகுப்பு..!

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் எல்லை பாதுகாப்ப...

அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன்..!

வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியை சந்தித...

சின்னியம்பாளையம் அருகே இளைஞரிடம் செல்போன் மற்றும் ரூ.2,000 பறிப்பு - மூவர் மீது வழக்கு

கோவை சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூர் அருகே மூன்று பேர் கொண்ட கும்பல் இளைஞரை திடீரென வழிமறித்து விலை உயர்ந்த செல்போன் மற்ற...

கோவை நேரு நகரில் 8 பவுன் தங்கச் செயின் பறிப்பு - பீளமேடு போலீசார் தீவிர விசாரணை

கோவை நேரு நகர் மேற்கு பேருந்து நிறுத்தம் அருகே பைக்கில் சென்ற பெண்ணிடமிருந்து மர்ம நபர் 8 பவுன் தங்கச் செயினை பறித்து தப...