கோவை மேற்கு புறவழிச்சாலையின் இரண்டாம் கட்ட பணிகளுக்கு ரூ.300 கோடி மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசின் அனுமதிக்காக காத்திருக்கும் இப்பணிகள், போக்குவரத்து நெரிசலை குறைக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Coimbatore: கோவை மாவட்டத்தில் மேற்கு புறவழிச்சாலையின் இரண்டாம் கட்ட பணிகளுக்கு ரூ.300 கோடி மதிப்பீட்டில் அனுமதி கோரப்பட்டுள்ளதாக தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோவையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண்பதற்காக, பாலக்காடு சாலையில் மதுக்கரை அருகே மைல்கல் பகுதியில் தொடங்கி, நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் முடியும் வகையில் 32.43 கி.மீ நீளத்திற்கு மேற்குப்புறவழிச்சாலை அமைக்கப்பட உள்ளது. இந்த சாலை 15 வருவாய் கிராமங்கள் வழியாக செல்லும்.
முதல் கட்டமாக 11.80 கி.மீ தூரத்திற்கு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இதுவரை 25 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. 5 கி.மீ தூரத்திற்கு சாலை ஏற்படுத்தப்பட்டு, 2 கி.மீ தூரத்திற்கு தார் சாலை அமைக்கும் அளவுக்கு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
இரண்டாவது கட்டமாக 12.10 கி.மீ தூரத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் நிறைவடைந்துள்ளன. கலிக்கநாயக்கன்பாளையம் மற்றும் வடவள்ளி ஆகிய கிராமங்களில் 80 சதவீத பணிகள் முடிந்துள்ளன. இந்த பணிகளை ஆகஸ்ட் மாதத்திற்குள் முடிக்கவும், சோமையம்பாளையத்தில் நிலம் கையகப்படுத்தும் பணியை செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மூன்றாவது கட்டமாக 8.52 கி.மீ தூரத்திற்கு புறவழிச்சாலை அமைக்க நிலம் கையகப்படுத்த கூடுதலாக ஆறு மாதங்கள் தேவைப்படும். இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்டத்திற்கான நிலம் கையகப்படுத்த தேவையான நிதியை தமிழக அரசு ஏற்கனவே ஒதுக்கியுள்ளது.
இரண்டாவது கட்டத்தில் சாலை அமைக்க ரூ.300 கோடி தேவைப்படும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிக்கை தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. நிர்வாக அனுமதி மற்றும் தொழில்நுட்ப அனுமதி பெற ஆறு மாதங்கள் ஆகலாம் என நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
முதல் கட்டப் பணிகள் முடிவதற்குள் இரண்டாவது கட்டத்திற்கான பூர்வாங்க வேலைகளை செய்தால், மேற்குப்புறவழிச்சாலை பணிகள் தொடர்ச்சியாக நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோவையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண்பதற்காக, பாலக்காடு சாலையில் மதுக்கரை அருகே மைல்கல் பகுதியில் தொடங்கி, நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் முடியும் வகையில் 32.43 கி.மீ நீளத்திற்கு மேற்குப்புறவழிச்சாலை அமைக்கப்பட உள்ளது. இந்த சாலை 15 வருவாய் கிராமங்கள் வழியாக செல்லும்.
முதல் கட்டமாக 11.80 கி.மீ தூரத்திற்கு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இதுவரை 25 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. 5 கி.மீ தூரத்திற்கு சாலை ஏற்படுத்தப்பட்டு, 2 கி.மீ தூரத்திற்கு தார் சாலை அமைக்கும் அளவுக்கு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
இரண்டாவது கட்டமாக 12.10 கி.மீ தூரத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் நிறைவடைந்துள்ளன. கலிக்கநாயக்கன்பாளையம் மற்றும் வடவள்ளி ஆகிய கிராமங்களில் 80 சதவீத பணிகள் முடிந்துள்ளன. இந்த பணிகளை ஆகஸ்ட் மாதத்திற்குள் முடிக்கவும், சோமையம்பாளையத்தில் நிலம் கையகப்படுத்தும் பணியை செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மூன்றாவது கட்டமாக 8.52 கி.மீ தூரத்திற்கு புறவழிச்சாலை அமைக்க நிலம் கையகப்படுத்த கூடுதலாக ஆறு மாதங்கள் தேவைப்படும். இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்டத்திற்கான நிலம் கையகப்படுத்த தேவையான நிதியை தமிழக அரசு ஏற்கனவே ஒதுக்கியுள்ளது.
இரண்டாவது கட்டத்தில் சாலை அமைக்க ரூ.300 கோடி தேவைப்படும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிக்கை தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. நிர்வாக அனுமதி மற்றும் தொழில்நுட்ப அனுமதி பெற ஆறு மாதங்கள் ஆகலாம் என நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
முதல் கட்டப் பணிகள் முடிவதற்குள் இரண்டாவது கட்டத்திற்கான பூர்வாங்க வேலைகளை செய்தால், மேற்குப்புறவழிச்சாலை பணிகள் தொடர்ச்சியாக நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.