கோவை மேற்கு புறவழிச்சாலை: இரண்டாம் கட்ட பணிகளுக்கு ரூ.300 கோடி மதிப்பீடு - அனுமதிக்காக காத்திருப்பு

கோவை மேற்கு புறவழிச்சாலையின் இரண்டாம் கட்ட பணிகளுக்கு ரூ.300 கோடி மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசின் அனுமதிக்காக காத்திருக்கும் இப்பணிகள், போக்குவரத்து நெரிசலை குறைக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Coimbatore: கோவை மாவட்டத்தில் மேற்கு புறவழிச்சாலையின் இரண்டாம் கட்ட பணிகளுக்கு ரூ.300 கோடி மதிப்பீட்டில் அனுமதி கோரப்பட்டுள்ளதாக தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோவையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண்பதற்காக, பாலக்காடு சாலையில் மதுக்கரை அருகே மைல்கல் பகுதியில் தொடங்கி, நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் முடியும் வகையில் 32.43 கி.மீ நீளத்திற்கு மேற்குப்புறவழிச்சாலை அமைக்கப்பட உள்ளது. இந்த சாலை 15 வருவாய் கிராமங்கள் வழியாக செல்லும்.

முதல் கட்டமாக 11.80 கி.மீ தூரத்திற்கு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இதுவரை 25 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. 5 கி.மீ தூரத்திற்கு சாலை ஏற்படுத்தப்பட்டு, 2 கி.மீ தூரத்திற்கு தார் சாலை அமைக்கும் அளவுக்கு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

இரண்டாவது கட்டமாக 12.10 கி.மீ தூரத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் நிறைவடைந்துள்ளன. கலிக்கநாயக்கன்பாளையம் மற்றும் வடவள்ளி ஆகிய கிராமங்களில் 80 சதவீத பணிகள் முடிந்துள்ளன. இந்த பணிகளை ஆகஸ்ட் மாதத்திற்குள் முடிக்கவும், சோமையம்பாளையத்தில் நிலம் கையகப்படுத்தும் பணியை செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மூன்றாவது கட்டமாக 8.52 கி.மீ தூரத்திற்கு புறவழிச்சாலை அமைக்க நிலம் கையகப்படுத்த கூடுதலாக ஆறு மாதங்கள் தேவைப்படும். இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்டத்திற்கான நிலம் கையகப்படுத்த தேவையான நிதியை தமிழக அரசு ஏற்கனவே ஒதுக்கியுள்ளது.

இரண்டாவது கட்டத்தில் சாலை அமைக்க ரூ.300 கோடி தேவைப்படும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிக்கை தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. நிர்வாக அனுமதி மற்றும் தொழில்நுட்ப அனுமதி பெற ஆறு மாதங்கள் ஆகலாம் என நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

முதல் கட்டப் பணிகள் முடிவதற்குள் இரண்டாவது கட்டத்திற்கான பூர்வாங்க வேலைகளை செய்தால், மேற்குப்புறவழிச்சாலை பணிகள் தொடர்ச்சியாக நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...