கோவை சிங்காநல்லூர் அருகே சுடுகாட்டில் சேவல் சண்டை சூதாட்டம்: 6 பேர் கைது

கோவை சிங்காநல்லூர் கள்ளிமடை பகுதியில் உள்ள சுடுகாட்டில் சேவல் சண்டை நடத்தி சூதாடிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். இரண்டு சேவல்கள் மற்றும் ரூ.7,000 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.


Coimbatore: கோவை சிங்காநல்லூர் கள்ளிமடை பகுதியில் உள்ள சுடுகாட்டுப் பகுதியில் சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக சிங்காநல்லூர் போலீசுக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, சப் இன்ஸ்பெக்டர் குறளரசன் தலைமையிலான போலீஸ் குழுவினர் ஜூலை 21 மாலை அப்பகுதியில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது சேவல் சண்டை நடத்தி சூதாடிக் கொண்டிருந்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் சிங்காநல்லூர் ராஜலட்சுமி மில் பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் (45), தங்கவேல் (42), சிட்கோ நாகராஜபுரம் சுரேஷ் (49), கள்ளிமடை கருப்புசாமி (38), விக்னேஸ்வரன் (32) மற்றும் மனோஜ் குமார் (20) ஆகியோர் ஆவர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 2 சேவல்களும், சூதாட்டத்திற்குப் பயன்படுத்தப்பட்ட ரூ.7,000 பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...