கோவை பெட்டதாபுரம் அருகே ராட்சச குடிநீர் குழாய் உடைப்பு: லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி மக்கள் அவதி

கோவை பெட்டதாபுரம் அருகே ராட்சச குடிநீர் குழாய் உடைந்து லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகியுள்ளது. குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களில் புகுந்த தண்ணீரால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.


கோவை: கோவை பெட்டதாபுரம் அருகே ராட்சச குடிநீர் குழாய் உடைந்து லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி, குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

கோவை வடவள்ளி - கவுண்டம்பாளையம் - தொண்டாமுத்தூர் கூட்டு குடிநீர் திட்டம் 2வது ஸ்கீமில் பில்லூர் அத்திகடவு குடி தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. இந்த குடிநீர் செல்ப்பனூர் பகுதியில் சுத்திகரிக்கப்பட்டு ராட்சச குழாய் மூலமாக பெட்டதாபுரம், வீரபாண்டி, பெரியநாயக்கன்பாளையம் வழியாக செல்கிறது.



பெட்டதாபுரம் அருகே ராட்சச குழாயில் பிளவு ஏற்பட்டு கடந்த ஒரு மாதம் காலமாக குடிநீர் கசிந்து சாலையில் ஓடிக்கொண்டிருந்தது. இதுகுறித்து அந்தப் பகுதி மக்கள் தகவல் தெரிவித்தும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.



தற்போது ராட்சச குழாயின் பிளவு பெரிதாகி உடைந்ததால் குடிநீர் வெள்ளம் போல பாய்ந்து வருகிறது.



வெளியேறும் நீர் அருகிலுள்ள குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களுக்குள் புகுந்து வருவதால் அந்த பகுதி பொதுமக்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள பிளவை சரி செய்ய வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...