தாராபுரம் அருகே மக்களுடன் முதல்வர் திட்ட முகாமை அமைச்சர் கயல்விழி ஆய்வு செய்தார்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. அமைச்சர் கயல்விழி செல்வராஜ் முகாமை ஆய்வு செய்து, மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை அடுத்த குண்டடம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு பஞ்சாயத்துகளுக்கான மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் முத்து கவுண்டன் பாளையம் சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது. இந்த முகாமை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

நந்தவனம்பாளையம், கொக்கம்பாளையம், முத்தியம்பட்டி, வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பஞ்சாயத்துகளுக்கான இந்த முகாம் மாவட்ட செயலாளரும், திருப்பூர் மாநகராட்சியின் நான்காவது மண்டல குழு தலைவருமான இலா. பத்மநாதன் தலைமையில் நடைபெற்றது.



இந்த முகாமில் மின்சார வாரியம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, காவல் துறை, மாற்றுத்திறனாளிகள் துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும் முகாம் அமைத்தன. இதன் மூலம் மக்கள் ஒவ்வொரு அலுவலகமாக செல்லாமல் ஒரே இடத்தில் தங்கள் குறைகளை பதிவு செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அமைச்சர் கயல்விழி செல்வராஜ் முகாமை ஆய்வு செய்த போது, பல்வேறு துறைகளின் அதிகாரிகளிடம் மக்களின் குறைகளை கேட்டறிந்தார். மேலும், முகாமில் பங்கேற்ற பொதுமக்களிடமும் நேரடியாக பேசி, அவர்களின் தேவைகள் மற்றும் குறைகளை கேட்டறிந்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...