தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு ஏப்ரல் 21-ஆம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. முன்னதாக தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு ஏப்ரல் 30-ஆம் தேதிக்கு பிறகுதான் கோடை விடுமுறை விடுவதாக திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால் மாநிலம் முழுவதும் பல மாவட்டங்களில் வெப்ப நிலை அதிகரித்து காணப்படுவதாலும், அனல் காற்று வீசுவதாலும் முன்கூட்டியே ஏப்ரல் 21-ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், முதலில் ஆரம்ப பள்ளிகளுக்கு வரும் 25 முதல் 29-ஆம் தேதிவரை தேர்வுகள் நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்பொழுது அனைத்து பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகள் இன்றுடன் நிறைவு பெற்றது.
எனவே, பள்ளி மாணவர்களுக்கு நாளை முதல் கோடை விடுமுறை தொடங்கவுள்ளதால் இன்று இறுதித் தேர்வு எழுதிவிட்டு மாணவர்கள் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர்.