கோவையில் போக்குவரத்து மாற்றம்: மக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு

கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, 100 அடி சாலையில் இருந்து சிவானந்தா காலனி செல்லும் வழியில் மாற்றம் செய்ய உத்தேசம். மக்கள் கருத்து தெரிவிக்க காவல்துறை அழைப்பு.


கோவை: கோவை மாநகர காவல்துறை இன்று (ஜூலை 23) வெளியிட்டுள்ள அறிக்கையில், நகரில் வாகனங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக, 100 அடி சாலையில் இருந்து சிவானந்தா காலனி செல்லும் வாகனங்களுக்கான புதிய வழித்தடம் உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வழித்தடம் பின்வருமாறு: காந்திபுரம் 100 அடி ரோடு ஷீலா மருத்துவமனை சந்திப்பில் இருந்து இடது பக்கம் திரும்பி, கொங்குநாடு மருத்துவமனை, கிராஸ்கட் ரோடு, வடகோவை மேம்பாலத்தின் வலது பக்கம் சர்வீஸ் ரோட்டில் திரும்பி பவர்ஹவுஸ் வழியாக சிவானந்தா காலனி மற்றும் 100 அடி ரோட்டிற்கு செல்லலாம். இந்த சாலையை ஒருவழிப் பாதையாக மாற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த மாற்றம் குறித்து பொதுமக்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. மக்கள் தங்கள் கருத்துக்களை ஜூலை 31, 2024க்கு முன்பாக, 0422-2212567 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தெரிவிக்கலாம் என காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும், அவினாசி சாலையில் நடைபெற்று வரும் உயர்மட்ட பாலப் பணிகள் காரணமாகவும், இரவு நேரங்களில் ஆம்னி பேருந்துகளால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் காரணமாகவும் பொதுமக்கள் சிரமப்படுவதாக காவல்துறை சுட்டிக்காட்டியுள்ளது.

இதனைக் கருத்தில் கொண்டு, ஆம்னி பேருந்து பயணிகள் ஏற்றும் இடங்களாக காந்திபுரம் மற்றும் டைடல் பார்க் ஆகிய இரண்டு இடங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளன. பயணிகள் குறிப்பிட்ட நேரத்திற்குள் வந்து பேருந்துகளில் ஏற வேண்டும் என்றும், தாமதமாக வரும் பயணிகளுக்காக பேருந்துகளை நிறுத்தி வைக்க முடியாது என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது. ஆம்னி பேருந்துகள் அதிக நேரம் சாலையில் நிறுத்தி வைக்கப்படுவது போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தக்கூடாது என்றும் காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

Newsletter

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...