கோவையில் திமுக உறுப்பினர் அடையாள அட்டைகளை வழங்கினார் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக்

கோவையில் திமுக மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் புதிய கழக உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார். இந்நிகழ்வு கலைஞர் நூற்றாண்டு மற்றும் கழகத்தின் பவளவிழா ஆண்டை முன்னிட்டு நடைபெற்றது.


கோவை: கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் (முன்னாள் எம்எல்ஏ) அவர்கள் இன்று (23.07.2024) செவ்வாய்க்கிழமை, புதிய கழக உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார்.



இந்த நிகழ்வு முத்தமிழறிஞர், செம்மொழிக் காவலர் தலைவர் கலைஞர் நூற்றாண்டு மற்றும் கழகத்தின் பவளவிழா ஆண்டை முன்னிட்டு நடைபெற்றது.



வடவள்ளி பகுதி திமுக செயலாளர் வ.ம.சண்முகசுந்தரம் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வார்டு எண்கள் 36, 37, 38, 39, 40 ஆகியவற்றின் வட்டக்கழகச் செயலாளர்களான விஸ்வநாதன், கா.வேலுச்சாமி, தெய்வம் மகாலட்சுமி, பாலகிருஷ்ணன், கதிரேசன் ஆகியோரிடம் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.



இந்நிகழ்வில் பொதுக்குழு உறுப்பினர் சரஸ்வதி புஷ்பராஜ், மாநகராட்சி மேற்கு மண்டல தலைவர் தெய்வயானை தமிழ்மறை, மாநகர் மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள், நெசவாளர் அணி அமைப்பாளர் வி.மணி, இலக்கிய அணி அமைப்பாளர் ராஜ்குமார், முரசொலி வெங்கடகிரி, அருள்மிகு மருதமலை சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் மருதமலை மகேஷ்குமார், சின்னதங்கம், பகுதிக்கழக, வட்டக்கழக நிர்வாகிகள், கழகத் தொண்டர்கள், கழக செயல்வீரர்கள், BLA-2 பூத் கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை வடக்கு-பீளமேடு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணி வைத்த இருவர் கைது

கோவை வடக்கு மற்றும் பீளமேடு ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணியை வைத்த வழக்கில் ரயில்வே பாதுகாப்புப்...

வீட்டில் கஞ்சா செடி வளர்த்த நபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் (52) தனது வீட்டில் கஞ்சா செடி வளர்த்ததோடு, 4 கிலோ கஞ்சா வ...

பொள்ளாச்சி ஆழியாறு பகுதியில் மது போதையில் தள்ளி இளைஞர் கொலை - குற்றவாளி கைது

பொள்ளாச்சி வட்டம் ஆழியாறு நெல்லித்துறை பகுதியில் குடும்ப பூசல் காரணமாக மது போதையில் வந்த ஆனந்த் என்பவர் பாலகிருஷ்ணனை தள்...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாம்பு தோன்றி பரபரப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பத்திரிகையாளர்கள் அறையில் நேற்று எதிர்பாராதவிதமாக பாம்பு ஒன்று தோன்றியதால் பரபரப்...

மூளைச்சாவடைந்த இளைஞரின் உறுப்பு தானம் மூவருக்கு புதுவாழ்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள வெஞ்சமடை பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் கருப்புசாமி மே 10ஆம் தேதி இருசக்...

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...