கோவை பேருந்தில் பயணி மறந்துவிட்ட ரூ.20,000-ஐ திருப்பி அளித்த ஓட்டுநர், நடத்துனர்

கோவையில் சோமனூர்-காந்திபுரம் வழித்தடப் பேருந்தில் பயணி மறந்துவிட்ட ரூ.20,000-ஐ உரியவரிடம் ஒப்படைத்த ஓட்டுநர் K.விஜயகுமார், நடத்துனர் V.A.முருகன் ஆகியோரை மேலாண் இயக்குநர் ஜோசப் டயஸ் பாராட்டினார்.


கோவை: கோவையில் அரசு பேருந்தில் பயணி மறந்துவிட்ட ரூ.20,000 பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை 19 ஆம் தேதி வெள்ளிக்கிழமை, கோவையில் TN 38 N 3524 எண் கொண்ட 20A வழித்தட பேருந்தில் சோமனூர் முதல் காந்திபுரம் வரை ஓட்டுநர் K.விஜயகுமார் மற்றும் நடத்துனர் V.A.முருகன் ஆகியோர் பணியாற்றினர். இந்த பேருந்தில் பயணித்த ஒரு பெண் பயணி தனது உடைமைகளை மறந்துவிட்டு சென்றுள்ளார்.

இதனை கவனித்த ஓட்டுநர் மற்றும் நடத்துனர் இருவரும் சேர்ந்து, அந்த பெண் பயணியை கண்டுபிடித்து, அவரது உடைமைகளை திருப்பி ஒப்படைத்துள்ளனர். அதில் ரூ.20,000 பணமும், பயணி வைத்திருந்த அனைத்து பொருட்களும் இருந்தன. இதனால் மகிழ்ச்சி அடைந்த அந்த பெண் பயணி, ஓட்டுநர் மற்றும் நடத்துனரின் நேர்மைக்கு நன்றி தெரிவித்தார்.

இந்த சம்பவம் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கோவை அரசு போக்குவரத்துக் கழகத்திற்கும், அதன் ஊழியர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளது. இந்நிலையில், இன்று (ஜூலை 23) கோவை அரசு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஜோசப் டயஸ், நேர்மையாக நடந்துகொண்ட ஓட்டுநர் K.விஜயகுமார் மற்றும் நடத்துனர் V.A.முருகன் ஆகியோரை அழைத்து பாராட்டினார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...