கோவை அன்னூர் காவல்துறையினர் கெம்மநாயக்கன்பாளையம் அருகே வாகன சோதனையின் போது பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நபரிடமிருந்து 1.1 கிலோ கஞ்சா பறிமுதல் செய்து கைது செய்தனர்.
கோவை: கோவை மாவட்டம் அன்னூர் காவல் நிலைய காவல்துறையினர் கெம்மநாயக்கன்பாளையம் அருகே இன்று (ஜூலை 23) வாகன சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் போது, கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மகாதேவ் சௌத்ரி என்பவரது மகன் ரவிசங்கர் சவுத்ரி (35) என அடையாளம் காணப்பட்டுள்ளார். காவல்துறையினர் அவரிடமிருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
பின்னர், கைது செய்யப்பட்ட ரவிசங்கர் சவுத்ரியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அவரை சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கைது செய்யப்பட்டவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மகாதேவ் சௌத்ரி என்பவரது மகன் ரவிசங்கர் சவுத்ரி (35) என அடையாளம் காணப்பட்டுள்ளார். காவல்துறையினர் அவரிடமிருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
பின்னர், கைது செய்யப்பட்ட ரவிசங்கர் சவுத்ரியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அவரை சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.