கோவை - லோக்மான்யா திலக் எக்ஸ்பிரஸ் 2 மணி நேரம் தாமதமாக புறப்படும்

கோவையில் இருந்து புறப்படும் லோக்மான்யா திலக் எக்ஸ்பிரஸ் பொறியியல் பணிகள் காரணமாக இன்று 2 மணி நேரம் தாமதமாக புறப்படும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இரயில் காலை 11 மணிக்கு புறப்படும்.


Coimbatore: கோவையில் இருந்து புறப்படும் லோக்மான்யா திலக் எக்ஸ்பிரஸ் இரயில் இன்று 2 மணி நேரம் தாமதமாக புறப்படும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

தென்னக ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வண்டி எண் 11014, கோவையில் இருந்து திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி வழியாகச் செல்லும் லோக்மான்யா திலக் எக்ஸ்பிரஸ் இன்று ஜூலை 24 காலை 8.50 மணிக்கு கோவை ஜங்சனில் இருந்து புறப்படுவதாக இருந்தது.

ஆனால், பொறியியல் பணிகள் காரணமாக இன்று ஒரு நாள் மட்டும் 2 மணி நேரம் 10 நிமிடங்கள் தாமதமாக காலை 11 மணிக்கு புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாமதம் இன்று ஒரு நாள் மட்டுமே என்றும், வழக்கமான அட்டவணைப்படி நாளை முதல் இரயில் இயக்கப்படும் என்றும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. பயணிகள் இந்த மாற்றத்தை கவனத்தில் கொண்டு தங்கள் பயணத்தை திட்டமிடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி முதுநிலை மாணவிகளுக்கு ஒருங்கிணைப்பு விழா நடைபெற்றது

Coimbatore மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் முதுநிலை மாணவிகளுக்கான ஒருங்கிணைப்பு விழா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் தொடர் மழையால் அமராவதி அணையின் நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 29.99...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு தென்மேற்கு பருவமழையால் அதிக நீர்வரத்து ஏற்பட்டுள...

கிணத்துக்கடவில் ஜூலை 23-24ல் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: கோவை மாவட்ட ஆட்சியர் நேரில் மனுக்கள் பெறுகிறார்

கிணத்துக்கடவு வட்டத்தில் ஜூலை 23-24 தேதிகளில் மாவட்ட ஆட்சியர் பவன் குமார்  தலைமையில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்...

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...

ரூ.5,000 லஞ்சம் புகார் எதிரொலி: பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்.

பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில், கள்ளத்தொடர்பு தொடர்பான வழக்கில் விசாரணைக்கு வந்த நபரிடம் ரூ.5,000 லஞ்சம் பெற்றதாக...