உடுமலையில் தங்கும் விடுதிக்குள் புகுந்த காட்டு யானைகள் கூட்டம் - வீடியோ வைரல்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே காந்தளூர் மறையூர் சாலையில் கட்டுமானப் பணி நடைபெற்று வரும் தங்கும் விடுதிக்குள் காட்டு யானைகள் கூட்டம் புகுந்து பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை தமிழக-கேரளா எல்லைப் பகுதியில் உள்ள காந்தளூர் மறையூர் சாலையில் தனியார் பள்ளி அருகில் தங்கும் விடுதி ஒன்று கட்டுமான பணி நடைபெற்று வருகின்றது. இந்த பகுதியில் சில தினங்களாக காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்திருந்தது.

இந்நிலையில், நேற்று இரவு காட்டு யானைகள் கூட்டம் தங்கும் விடுதிக்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சுமார் ஒரு மணி நேரம் கழித்து, தங்கும் விடுதியின் கதவுகள் மூடப்பட்டிருந்த நிலையிலும், யானைகள் கதவுகளை உடைத்துக் கொண்டு வெளியேறின.



தங்கும் விடுதியில் யாரும் இல்லாத காரணத்தால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது. இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்வதால், வனத்துறை அதிகாரிகள் இப்பகுதியில் கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும் என்று உள்ளூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பரப்புரை..!

NDA ஆட்சி அமைந்தால், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை போன்று தமிழகத்திலும் நிலைமை உரு...

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...