திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே காந்தளூர் மறையூர் சாலையில் கட்டுமானப் பணி நடைபெற்று வரும் தங்கும் விடுதிக்குள் காட்டு யானைகள் கூட்டம் புகுந்து பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை தமிழக-கேரளா எல்லைப் பகுதியில் உள்ள காந்தளூர் மறையூர் சாலையில் தனியார் பள்ளி அருகில் தங்கும் விடுதி ஒன்று கட்டுமான பணி நடைபெற்று வருகின்றது. இந்த பகுதியில் சில தினங்களாக காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்திருந்தது.
இந்நிலையில், நேற்று இரவு காட்டு யானைகள் கூட்டம் தங்கும் விடுதிக்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சுமார் ஒரு மணி நேரம் கழித்து, தங்கும் விடுதியின் கதவுகள் மூடப்பட்டிருந்த நிலையிலும், யானைகள் கதவுகளை உடைத்துக் கொண்டு வெளியேறின.

தங்கும் விடுதியில் யாரும் இல்லாத காரணத்தால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது. இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்வதால், வனத்துறை அதிகாரிகள் இப்பகுதியில் கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும் என்று உள்ளூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று இரவு காட்டு யானைகள் கூட்டம் தங்கும் விடுதிக்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சுமார் ஒரு மணி நேரம் கழித்து, தங்கும் விடுதியின் கதவுகள் மூடப்பட்டிருந்த நிலையிலும், யானைகள் கதவுகளை உடைத்துக் கொண்டு வெளியேறின.
தங்கும் விடுதியில் யாரும் இல்லாத காரணத்தால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது. இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்வதால், வனத்துறை அதிகாரிகள் இப்பகுதியில் கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும் என்று உள்ளூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.