உடுமலையில் தங்கும் விடுதிக்குள் புகுந்த காட்டு யானைகள் கூட்டம் - வீடியோ வைரல்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே காந்தளூர் மறையூர் சாலையில் கட்டுமானப் பணி நடைபெற்று வரும் தங்கும் விடுதிக்குள் காட்டு யானைகள் கூட்டம் புகுந்து பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை தமிழக-கேரளா எல்லைப் பகுதியில் உள்ள காந்தளூர் மறையூர் சாலையில் தனியார் பள்ளி அருகில் தங்கும் விடுதி ஒன்று கட்டுமான பணி நடைபெற்று வருகின்றது. இந்த பகுதியில் சில தினங்களாக காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்திருந்தது.

இந்நிலையில், நேற்று இரவு காட்டு யானைகள் கூட்டம் தங்கும் விடுதிக்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சுமார் ஒரு மணி நேரம் கழித்து, தங்கும் விடுதியின் கதவுகள் மூடப்பட்டிருந்த நிலையிலும், யானைகள் கதவுகளை உடைத்துக் கொண்டு வெளியேறின.



தங்கும் விடுதியில் யாரும் இல்லாத காரணத்தால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது. இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்வதால், வனத்துறை அதிகாரிகள் இப்பகுதியில் கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும் என்று உள்ளூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

“நாங்கள் கட்சிக்காக வாக்கு கேட்கவில்லை; அடுத்த தலைமுறைக்காக வாக்கு கேட்கிறோம்” – கோவையில் சுப. வீரபாண்டியன் விமர்சனம்

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் செந்தில் பாலாஜியை ஆதரித்து, திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டி...

சிங்காநல்லூர் தொகுதி: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆவாரம்பாளையத்தில் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆதரவாக ஆவாரம்பாளையம் பகுதியில் தீவிர...

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...