உடுமலை அரசு கலைக் கல்லூரியில் நாளை இறுதி கட்ட கலந்தாய்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு கலைக் கல்லூரியில் காலியாக உள்ள 55 இடங்களுக்கான இறுதி கட்ட கலந்தாய்வு நாளை (25.01.2024) நடைபெறுகிறது. புதிய மற்றும் ஏற்கனவே விண்ணப்பித்த மாணவர்கள் கலந்து கொள்ளலாம்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு கலைக் கல்லூரியில் காலியாக உள்ள பாடப்பிரிவுகளில் சேர்வதற்கான இறுதி கட்ட கலந்தாய்வு நாளை (25.01.2024) நடைபெற உள்ளது. கல்லூரி முதல்வர் முனைவர் சோ.கி.கல்யாணி இது குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளார்.

கல்லூரியில் 14 இளநிலைப் பாடப்பிரிவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. 2024-2025 ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி நடைபெற்றது. மொத்தமுள்ள 864 இடங்களில் 809 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 55 இடங்களை நிரப்புவதற்காக இந்த இறுதி கட்ட கலந்தாய்வு நடத்தப்படுகிறது.



இந்த கலந்தாய்வில் பின்வரும் மாணவர்கள் கலந்து கொள்ளலாம்:

1. ஏற்கனவே ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து கலந்து கொள்ள இயலாதவர்கள்

2. கலந்தாய்வுக்கு வருகைபுரிந்தும் சேர்வதற்கு வாய்ப்புக் கிடைக்கப் பெறாதவர்கள்

3. புதிதாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தவர்கள்

4. இதுவரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்காதவர்கள்

இதுவரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்காதவர்கள் 24.01.2024 அன்று கல்லூரிக்கு நேரடியாக வந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து, அடுத்த நாள் நடைபெறும் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்.

கலந்தாய்வில் பங்குபெற வரும் மாணவர்கள் பின்வரும் ஆவணங்களை கொண்டு வர வேண்டும்:

- அனைத்து அசல் சான்றிதழ்கள் மற்றும் மூன்று நகல்கள்

- உரிய கல்விக் கட்டணம்

- இணையதளத்தில் பதிவேற்றம் செய்த விண்ணப்ப நகல்

மாணவர்கள் தங்கள் பெற்றோரை உடன் அழைத்து வர வேண்டும். மேலும் விவரங்களுக்கு கல்லூரியின் www.gacudpt.in என்ற இணையதளத்தை பார்வையிடலாம் என்று கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.

Newsletter

கிணத்துக்கடவு தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விற்பனை நடந்தால் காவல் நிலைய முற்றுகை - எம்.எல்.ஏ விக்னேஷ்

கிணத்துக்கடவு தொகுதியை மது மற்றும் போதைப்பொருட்கள் இல்லாத முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என தெரிவித்த தவெக எம்.எல்.ஏ வி...

கோவை அதிமுக பிரமுகர் மற்றும்வழக்கறிஞர் வினீத் தவெகவில் இணைந்தார்

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பிரச்சினைகளால் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்க...

மதுவிலக்கே தீர்வு; கள்ளுக்கு அனுமதி வேண்டும் - கொமதேக தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன்

717 டாஸ்மாக் கடைகளை மூடும் அரசின் நடவடிக்கையை வரவேற்ற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், மதுபழக்கத்தை க...

FL2 மதுபான உரிமங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் - முதலமைச்சருக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை

பொறுப்பேற்ற மூன்றாவது நாளிலேயே பள்ளி, கல்லூரி மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகிலிருந்த 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தர...

கோவை மாவட்ட பஞ்சாயத்துக்கு தேசிய விருது: நல்லாட்சிக்கான அங்கீகாரம்

கோவை மாவட்ட பஞ்சாயத்து தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்று நானாஜி தேஷ்முக் விருதை வெல்ல தேர்வானது. வறுமை ஒழிப்பு, நீர் மேல...