உக்கடம் சிஎம்சி காலனியில் வாக்குறுதி அளித்த வீடுகளை கட்டித்தர கோரிக்கை: இந்து மக்கள் கட்சி மனு

கோவை உக்கடம் சிஎம்சி காலனியில் வாக்குறுதியளித்த வீடுகளைக் கட்டித்தரக் கோரி இந்து மக்கள் கட்சி மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்துள்ளது. மீன் மார்க்கெட் அகற்றவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.


Coimbatore: கோவை உக்கடம் சிஎம்சி காலனி பகுதியில் 520க்கும் மேற்பட்ட வீடுகளைக் கட்டித் தருவதாக மாநகராட்சி அதிகாரிகளும் குடிசை மாற்று வாரியமும் வாக்குறுதி அளித்திருந்தனர். ஆனால், இதுவரை 222 வீடுகள் மட்டுமே கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், மீதமுள்ள வீடுகளை உடனடியாகக் கட்டித் தர வேண்டும் என்றும், அப்பகுதியில் உள்ள மீன் மார்க்கெட்டை அகற்ற வேண்டும் என்றும் கோரி இந்து மக்கள் கட்சி சார்பாக இன்று மாநகராட்சி ஆணையர் M. சிவகுரு பிரபாகரனிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

மனுவில், "உக்கடம் சிஎம்சி காலனி பகுதியில் 520க்கும் மேற்பட்ட வீடுகளை கட்டித் தருவதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். ஆனால், இதுவரை 222 வீடுகள் மட்டுமே கட்டப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள வீடுகளை விரைவில் கட்டித் தர வேண்டும்" என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், அப்பகுதியில் உள்ள மீன் மார்க்கெட் காரணமாக சுகாதாரச் சீர்கேடு ஏற்படுவதாகவும், அதனை அகற்ற வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த மனுவை மாநகராட்சி ஆணையர் பெற்றுக்கொண்டு, தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.

Newsletter

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...