நிபா வைரஸ் அச்சம்: கோவை-கேரளா எல்லையில் தீவிர கண்காணிப்பு; கல்லூரிகளுக்கு அறிவுறுத்தல்

கேரளாவில் நிபா வைரஸ் பரவல் காரணமாக கோவை-கேரளா எல்லையில் 11 சோதனை சாவடிகளில் தீவிர கண்காணிப்பு. கோவை மண்டல கல்லூரிகளுக்கு கேரளா சுற்றுலா செல்வதை தவிர்க்க அறிவுறுத்தல்.


கோவை: கேரள மாநிலம் மலப்புரத்தில் நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அண்மையில் கண்டறியப்பட்டதை அடுத்து, கோவை-கேரளா எல்லையில் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கோவை-கேரளா எல்லையில் உள்ள வாளையாறு, வேலந்தா வளம், மாங்கரை, மீனாட்சிபுரம் உள்ளிட்ட 11 சோதனை சாவடிகளில் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள், நர்சுகள் உள்ளிட்டோர் முழு கவச உடை அணிந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் கேரளாவில் இருந்து கோவை வரும் பஸ், ஆட்டோ, கார் உள்பட அனைத்து வாகனங்களையும் தீவிரமாக கண்காணிக்கிறார்கள்.

வாகனங்களில் வரும் அனைவருக்கும் காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டு, அதன்பிறகே அவர்கள் கோவை மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், கேரளாவில் இருந்து வரும் அனைத்து வாகனங்களின் உள்ளேயும், டயர்களிலும் சானிடைசர் தெளிக்கப்பட்ட பிறகே தமிழக எல்லைக்குள் அனுமதிக்கப்படுவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், நிபா வைரஸ் எதிரொலியால் கோவை மண்டலத்தில் உள்ள கல்லூரிகளுக்கு கல்வித்துறை சுற்றறிக்கை இன்று ஜூலை 24 அனுப்பியுள்ளது. அதில் கல்லூரி மாணவ, மாணவிகளை கேரளாவுக்கு சுற்றுலா அழைத்துச் செல்வதை தவிர்க்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...