கோவை மாவட்ட வன அலுவலகத்தில் தனியார் பள்ளி மாணவர்கள் வருகை புரிந்தனர். வன அதிகாரி ராமசுப்பிரமணியம் சிகிச்சை பெற்ற 30க்கும் மேற்பட்ட கிளிகளை மாணவர்களின் கைகளால் விடுவிக்க வைத்தார்.
கோவை: கோவை மாவட்டத்தின் வடகோவை பகுதியில் அமைந்துள்ள மாவட்ட வன அலுவலகத்திற்கு இன்று (ஜூலை 24) தனியார் பள்ளி மாணவர்கள் சுற்றுலா வந்தனர். இந்த வருகையின் போது, மாணவர்கள் பறவைகளை கூண்டில் வைத்து அடைப்பது குறித்து வன அதிகாரிகளிடம் கேள்விகள் கேட்டு தெரிந்து கொண்டனர்.
வன அதிகாரி ராமசுப்பிரமணியம், வனப்பகுதியில் அடிபட்டு சிகிச்சை பெற்று வந்த கிளிகளை வனப்பகுதியில் விடுவிக்க தயாராக இருந்தார். இந்த நிலையில், சுமார் 30க்கும் மேற்பட்ட கிளிகளை மாணவர்களின் கைகளால் திறந்து விடுவிக்க வைத்தார்.
வன அதிகாரி ராமசுப்பிரமணியம், வனப்பகுதியில் அடிபட்டு சிகிச்சை பெற்று வந்த கிளிகளை வனப்பகுதியில் விடுவிக்க தயாராக இருந்தார். இந்த நிலையில், சுமார் 30க்கும் மேற்பட்ட கிளிகளை மாணவர்களின் கைகளால் திறந்து விடுவிக்க வைத்தார்.