கோவையில் ஆங்காங்கே உள்ள சிக்னல்களில் பல சிறுவர், சிறுமியர்கள் பிச்சை எடுத்து வருகின்றனர்.
இவர்களை சில தரகர்கள் வட மாநிலங்களில் இருந்து அழைத்து வந்து தமிழகம் போன்ற மாநிலங்களில் பிச்சை எடுக்க வைப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், கோவை மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் சாலைகளில் பிச்சை எடுக்கும் குழந்தைகளை மீட்குக் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
இன்று காலை 9 மணி முதல் மாலை வரையிலும் இந்த மீட்பு நடவடிக்கைகள் நடைபெறும் என்றும், மாலையில் மீட்கப்பட்ட குழந்தைகள் குறித்த தகவல்கள் வெளியாகும் என்றும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.