கோவை ரமணீஸ் மயூரியில் பாதாள சாக்கடை பணியை விரைவில் முடிக்க பொதுமக்கள் கோரிக்கை

கோவை ரமணீஸ் மயூரியில் இரண்டு மாதங்களாக நடைபெறும் பாதாள சாக்கடை பணியால் மழைநீர் தேங்கி, வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு சிரமம். பணியை விரைவில் முடிக்க கோரிக்கை.


Coimbatore: கோயம்புத்தூர் துடியலூர் சரவணம்பட்டி ரோட்டில் அமைந்துள்ள ரமணீஸ் மயூரியில் பாதாள சாக்கடை பணி இரண்டு மாத காலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இப்பணியால் ஏற்பட்டுள்ள சிரமங்கள் குறித்து பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

பாதாள சாக்கடை பைப் புதைக்கப்பட்டு பள்ளங்கள் சரியாக மூடப்படாத நிலையில் நேற்று பெய்த பலத்த மழை காரணமாக பள்ளங்களில் ஆங்காங்கே மழை நீர் தேங்கி வாகன ஓட்டிகளுக்கு மிக சிரமத்தை ஏற்படுத்துகிறது. இதனால் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளும் நடந்து செல்பவர்களும் மழை நீரில் நடந்து செல்வதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாதாள சாக்கடை பணியை விரைவில் முடிக்க வேண்டும் என்றும் ரமணீஸ் மயூரி பகுதி பொதுமக்கள் இன்று (ஜூலை 25) கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், பணி முடியும் வரை தற்காலிக நடவடிக்கையாக சாலையை சீரமைக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...

N.R. கார்த்திகேயன் தலைமையில் திமுக தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஆக்கபூர்வமான பணிகள் குறித்து திமுக நிர்வாகிகள் கலந்...

தேர்தல் பார்வையாளர்கள் பட்டியல்: Dr மகேந்திரன் பொள்ளாச்சி வால்பாறை தொகுதி நியமனம்

2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் Dr மகேந்திரன் உள்ளிட்டோர் பார்வையாளர்களாக நியமி...

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...