நாடு முழுவதும் உணவு பரிசோதனை கூடங்களை மேம்படுத்த 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் உணவு தரம் கட்டுப்பாட்டு முதன்மை செயல் அலுவலர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கோவையில் செய்தியாளர்சள் சந்திப்பில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் உணவு தரம் கட்டுப்பாட்டு முதன்மை செயல் அலுவலர் ஐஏஎஸ் பவன்குமார் அகர்வால் பேசியதாவது:-
தமிழகத்தைப் பொருத்தவரையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிகளவு இருக்கின்றனர். தமிழகத்தில் உணவு தரக்கட்டுப்பாடும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
மத்திய அரசு நாடு முழுவதும் உள்ள உணவு பரிசோதனை கூடங்களை மேம்படுத்த 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. தமிழகத்தில் செயல்பட்டுவரும் இரண்டு பரிசோதனைக் கூடங்கள் மேம்படுத்தப்பட உள்ளது. மேலும், தனியாரிடம் உள்ள 124 உணவு பரிசோதனை மையங்களையும் பயன்படுத்திக்கொள்ள திட்டமிடப்பட்டு உள்ளது" என்றார்.
