காண்டூர் கால்வாய் சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க கோரி விவசாயிகள் போராட்டம்

பொள்ளாச்சியில் உள்ள பரம்பிக்குளம் ஆழியார் பாசன திட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தை 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். காண்டூர் கால்வாய் சீரமைப்பு பணிகளை விரைந்து முடித்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க கோரிக்கை வைத்தனர்.


கோவை: பொள்ளாச்சியில் உள்ள பரம்பிக்குளம் ஆழியார் பாசன திட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். காண்டூர் கால்வாயில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளை விரைந்து முடித்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட கோரி இந்த போராட்டம் நடைபெற்றது.



பொள்ளாச்சி மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சோலையாறு, பரம்பிக்குளம் ஆகிய பாசன திட்ட அணைகளில் சேகரிக்கப்படும் தண்ணீர் காண்டூர் கால்வாய் வழியாக திருமூர்த்தி அணைக்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்த தண்ணீர் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள 4 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. தற்போது மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மழை பெய்து வருவதால் அணைகள் நிரம்பி நீர்வரத்தும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் கொண்டு செல்லும் காண்டூர் கால்வாயில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.



இந்த பிரச்சினையை தீர்க்க கோரி, பொள்ளாச்சியில் உள்ள பரம்பிக்குளம் ஆழியார் பாசன திட்டத்திற்குட்பட்ட காங்கயம், வெள்ளகோவில் பகுதியைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் பரம்பிக்குளம் ஆழியார் பாசன திட்ட செயல் பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.



போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுடன் அதிகாரிகள் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர்.



அதிகாரிகள் தரப்பில், ஆகஸ்ட் 5ஆம் தேதிக்குள் பணிகளை நிறைவு செய்து, காண்டூர் கால்வாய் வழியாக திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் திறக்கப்படும் எனவும், ஆகஸ்ட் 15ம் தேதிக்கு மேல் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தனர். ஆனால், அதிகாரிகளின் உறுதிமொழியை ஏற்க மறுத்த விவசாயிகள் தொடர்ந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...