கோவை புதூர் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் நகைகள் கொள்ளை

கோவை புதூர் காமாட்சி நகரில் வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. வீட்டு உரிமையாளர் வெளியூர் சென்றிருந்த நேரத்தில் இந்த கொள்ளை நடந்துள்ளது.


Coimbatore: கோவை புதூர் காமாட்சி நகரில் வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை புதூர் காமாட்சி நகரை சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி கீதா (72). கீதா கடந்த ஜூலை 22ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு திருவனந்தபுரத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார்.

இந்நிலையில், ஜூலை 24 மாலை கீதாவின் வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை வேலைக்காரப் பெண் முத்துலட்சுமி கண்டுபிடித்தார். உடனடியாக அவர் கீதாவுக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் வீட்டை சோதித்தபோது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 14 பவுன் தங்க நகைகள் காணாமல் போயிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து கீதா குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் வழக்குப் பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டு வருகிறார்.

இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வீட்டை பூட்டி விட்டு வெளியூர் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், பாதுகாப்பு ஏற்பாடுகளை மேம்படுத்த வேண்டும் என்றும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...