பவானிசாகர் அருகே சேற்றில் சிக்கிய யானை வனத்துறையினரால் மீட்பு


சத்தியமங்கலத்திற்கு உட்பட்ட பவானிசாகர் அணை மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய அடர்ந்த வனப்பகுதியின் மத்தியில் அமைந்துள்ளது. 

இந்த வனப்பகுதிகள் மற்றும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் புலி, சிறுத்தை, யானை, கரடி, மான், காட்டெருமை, செந்நாய் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன.

கடந்த ஒருமாத காலமாக சரிவர மழை பெய்யாததால் பவானிசாகர் வனப்பகுதியில் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வனப்பகுதியில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் யானைகள் குட்டிகளுடன் கூட்டம், கூட்டமாக அணையின் நீர்த்தேக்கப்பகுதியை நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள்ளன.



இந்நிலையில், அன்னூர் அடுத்த பவானிசாகர் சித்தன்குட்டையில் நீர் அருந்த வந்த காட்டு யானை ஒன்று சேற்றில் சிக்கியது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் அதனை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.



இதனைத்தொடர்ந்து, பல மணி நேரம் போராட்டத்திற்கு பின்பு வனத்துறையினர் உதவியுடன் மீட்டெழுந்த யானை வனப்பகுதிக்குள் சென்றது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...