வழக்கறிஞர்களுக்கான நடத்தை விதி முறைகளில் மாற்றம் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக சட்ட ஆணையம் வழக்கறிஞர்களுக்கான நடத்தை விதிமுறைகளில் மாற்றம் செய்து பரிந்துரை நகலை வழங்கியுள்ளது.
இந்த விதிமுறைகள் வழகறிஞர்களின் உரிமைகளை பறிப்பதாக அமைந்துள்ளதாகக் கூறி இன்று கோவை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், நீதிமன்ற பணிகள் முடக்கியுள்ளன.
இந்நிலையில், கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பாக இன்று பிற்பகல் வழக்கறிஞர்கள் சட்ட ஆணையத்தின் நடத்தை விதிமுறைகளில் மாற்றம் செய்து பரிந்துரை செய்துள்ள நகலை தீ வைத்து எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது சட்ட ஆணையத்தின் பரிந்துரைகளானது வழக்கறிஞர்கள் தொழில் செய்ய முடியாத படி அபராதம், சிறை தண்டனை போன்றவை கிடைக்கும் அளவிற்கு திருத்தங்கள் செய்யப்பட்டு இருப்பதாகவும், இந்த திருத்தங்கள் திரும்பப் பெற வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
மேலும் இக்கோரிக்கைகளை வலியுறுத்தி வழகறிஞர்கள் சார்பில் அடுத்த மாதம் 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் தில்லியில் போராட்டம் நடத்தவுள்ளதாகவும் தெரிவித்தனர்.
இந்த விதிமுறைகள் வழகறிஞர்களின் உரிமைகளை பறிப்பதாக அமைந்துள்ளதாகக் கூறி இன்று கோவை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், நீதிமன்ற பணிகள் முடக்கியுள்ளன.
இந்நிலையில், கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பாக இன்று பிற்பகல் வழக்கறிஞர்கள் சட்ட ஆணையத்தின் நடத்தை விதிமுறைகளில் மாற்றம் செய்து பரிந்துரை செய்துள்ள நகலை தீ வைத்து எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது சட்ட ஆணையத்தின் பரிந்துரைகளானது வழக்கறிஞர்கள் தொழில் செய்ய முடியாத படி அபராதம், சிறை தண்டனை போன்றவை கிடைக்கும் அளவிற்கு திருத்தங்கள் செய்யப்பட்டு இருப்பதாகவும், இந்த திருத்தங்கள் திரும்பப் பெற வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
மேலும் இக்கோரிக்கைகளை வலியுறுத்தி வழகறிஞர்கள் சார்பில் அடுத்த மாதம் 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் தில்லியில் போராட்டம் நடத்தவுள்ளதாகவும் தெரிவித்தனர்.