பொள்ளாச்சி-பல்லடம் சாலையில் ரூ.40 கோடியில் நான்கு வழிச்சாலை பணி: அதிகாரிகள் ஆய்வு

கோவை மாவட்டம் பொள்ளாச்சி-பல்லடம் சாலையில் ரூ.40 கோடி மதிப்பீட்டில் நான்கு வழிச்சாலை விரிவாக்கப் பணி நடைபெறுகிறது. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பணிகளை ஆய்வு செய்தனர்.


கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி உட்கோட்டத்துக்கு உட்பட்ட பல்லடம் ரோட்டில் ரூ.40 கோடி மதிப்பீட்டில் நான்கு வழிச்சாலை விரிவாக்கப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இருவழிச் சாலையிலிருந்து நான்கு வழிச்சாலையாக மாற்றும் இப்பணி காமநாயக்கன்பாளையம் முதல் சுல்தான்பேட்டை வரையிலும், காட்டம்பட்டி முதல் நெகமம் வரையிலும் மேற்கொள்ளப்படுகிறது.

இந்தப் பணிகளை நேற்று (ஜூலை 23) கோவை வட்டம் நெடுஞ்சாலைத்துறை, கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கண்காணிப்பு பொறியாளர் ரமேஷ் நேரில் ஆய்வு செய்தார். அப்போது விரிவாக்கம் செய்யப்பட்ட சாலையின் அளவு மற்றும் அதன் தரம் குறித்து அதிகாரிகளிடம் விசாரித்தார். நான்கு வழிச்சாலை சிறப்பாக அமைய வேண்டிய முறைகள் குறித்து அறிவுரைகளை வழங்கினார்.

மேலும், சாலை விரிவாக்கப் பணிகளை விரைவாகவும், தரமாகவும் செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது, நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் சரவணச் செல்வம், உதவி கோட்டப் பொறியாளர் அருணகிரி, அறிவழகன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

இந்த நான்கு வழிச்சாலை திட்டம் நிறைவடையும்போது, பொள்ளாச்சி-பல்லடம் இடையேயான போக்குவரத்து நெரிசல் குறையும் என்றும், பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு பயணம் எளிதாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...