துடியலூர் அருகே வீட்டில் 10 பவுன் நகை மற்றும் ரூ.25,000 பணம் கொள்ளை

கோவை துடியலூர் அருகே அப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் கதவை உடைத்து 10 பவுன் நகை, ரூ.25,000 பணம் கொள்ளையடிக்கப்பட்டது. குடும்பம் திருப்பதி சென்றிருந்த போது இச்சம்பவம் நடந்துள்ளது.


Coimbatore: கோவை மாவட்டம் துடியலூர் அருகே உள்ள அப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் கதவை உடைத்து 10 பவுன் நகை மற்றும் ரூ.25,000 பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் குறித்து கிடைத்த விவரங்களின்படி, துடியலூர் அப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் பக்தவச்சலம் (70). இவர், கடந்த ஜூலை 23ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் திருப்பதி சென்றார். பின்னர் அங்கிருந்து ஜூலை 25ஆம் தேதி கோவை திரும்பினர்.

வீட்டிற்கு திரும்பிய பக்தவச்சலம், கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டார். உள்ளே சென்று பார்த்தபோது, உடைமைகள் சிதறி கிடந்தன. பீரோவில் வைத்திருந்த தங்க வளையல், செயின், பிரேஸ்லெட் உள்ளிட்ட 10 பவுன் நகை மற்றும் ரூ.25,000 மதிப்பிலான வெள்ளி பொருட்கள் கொள்ளை போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இச்சம்பவம் குறித்து பக்தவச்சலம் துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...