விவசாயிகளுக்கு ஆதரவாக ஏப்ரல் 25ம் தேதி தமிழகம் முழுவதும் ஓட்டல்கள் அடைக்கப்படும்- தமிழ்நாடு ஓட்டல்கள் சங்க தலைவர் வெங்கிடசுப்பு

தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக வரும் ஏப்ரல் 25ம் தேதியன்று தமிழகம் முழுவதும் ஓட்டல்கள் அடைக்கப்படும் என தமிழ்நாடு ஓட்டல்கள் சங்க தலைவர் வெங்கிடசுப்பு தெரிவித்துள்ளார். கோவையில் தமிழ்நாடு ஓட்டல் சங்க தலைவர் வெங்கிடசுப்பு செய்தியாளர்கள் சந்திப்பின் போது இதுகுறித்து கூறியதாவது:-

தமிழகத்தில் வரும் 25-ம் தேதி விவசாயிகளுக்கு ஆதரவாக நடைபெறும் கதவடைப்பு போராட்டத்தில் தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கம் பங்கேற்க உள்ளது. அன்றைய தினம் தமிழகம் முழுவதும் உள்ள 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உணவகங்களும் மூடப்படும்.

மேலும், அன்றையதினம் தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் சார்பில் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்து அடையாளமாக போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர். 

உணவு பொருட்கள் அனைத்து இடங்களிலும் ஒரே விலையில் கிடைக்க வாய்ப்பில்லை. இருக்கும் இடம், வாடகை, ஊதியம் போன்றவற்றின் அடிப்படையில் உணவு பொருட்களின் விலை மாறும். ஆனால் அனைத்து இடங்களிலும் தரமான உணவு வழங்கப்படுகிறது. உணவு பாதுகாப்பு சட்டத்தில் ஒரு சில விதிகளை தவிர, சட்டம் வரவேற்கும் படியாகவே உள்ளது" என தமிழ்நாடு ஓட்டல்கள் சங்க தலைவர் வெங்கிடசுப்பு தெரிவித்தார்.

இதனிடையே விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தில்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக கோவை உக்கடம் பணிமனை முன்பாக போக்குவரத்துக் கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, விவசாயிகளின் பிரச்சனைக்கு தீர்வு காண மத்திய, மாநில அரசுகள் தவறி விட்டன. விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு உடனடியாக தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...