தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக வரும் ஏப்ரல் 25ம் தேதியன்று தமிழகம் முழுவதும் ஓட்டல்கள் அடைக்கப்படும் என தமிழ்நாடு ஓட்டல்கள் சங்க தலைவர் வெங்கிடசுப்பு தெரிவித்துள்ளார். கோவையில் தமிழ்நாடு ஓட்டல் சங்க தலைவர் வெங்கிடசுப்பு செய்தியாளர்கள் சந்திப்பின் போது இதுகுறித்து கூறியதாவது:-
தமிழகத்தில் வரும் 25-ம் தேதி விவசாயிகளுக்கு ஆதரவாக நடைபெறும் கதவடைப்பு போராட்டத்தில் தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கம் பங்கேற்க உள்ளது. அன்றைய தினம் தமிழகம் முழுவதும் உள்ள 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உணவகங்களும் மூடப்படும்.
மேலும், அன்றையதினம் தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் சார்பில் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்து அடையாளமாக போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.
உணவு பொருட்கள் அனைத்து இடங்களிலும் ஒரே விலையில் கிடைக்க வாய்ப்பில்லை. இருக்கும் இடம், வாடகை, ஊதியம் போன்றவற்றின் அடிப்படையில் உணவு பொருட்களின் விலை மாறும். ஆனால் அனைத்து இடங்களிலும் தரமான உணவு வழங்கப்படுகிறது. உணவு பாதுகாப்பு சட்டத்தில் ஒரு சில விதிகளை தவிர, சட்டம் வரவேற்கும் படியாகவே உள்ளது" என தமிழ்நாடு ஓட்டல்கள் சங்க தலைவர் வெங்கிடசுப்பு தெரிவித்தார்.
இதனிடையே விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தில்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக கோவை உக்கடம் பணிமனை முன்பாக போக்குவரத்துக் கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, விவசாயிகளின் பிரச்சனைக்கு தீர்வு காண மத்திய, மாநில அரசுகள் தவறி விட்டன. விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு உடனடியாக தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
தமிழகத்தில் வரும் 25-ம் தேதி விவசாயிகளுக்கு ஆதரவாக நடைபெறும் கதவடைப்பு போராட்டத்தில் தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கம் பங்கேற்க உள்ளது. அன்றைய தினம் தமிழகம் முழுவதும் உள்ள 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உணவகங்களும் மூடப்படும்.
மேலும், அன்றையதினம் தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் சார்பில் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்து அடையாளமாக போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.
உணவு பொருட்கள் அனைத்து இடங்களிலும் ஒரே விலையில் கிடைக்க வாய்ப்பில்லை. இருக்கும் இடம், வாடகை, ஊதியம் போன்றவற்றின் அடிப்படையில் உணவு பொருட்களின் விலை மாறும். ஆனால் அனைத்து இடங்களிலும் தரமான உணவு வழங்கப்படுகிறது. உணவு பாதுகாப்பு சட்டத்தில் ஒரு சில விதிகளை தவிர, சட்டம் வரவேற்கும் படியாகவே உள்ளது" என தமிழ்நாடு ஓட்டல்கள் சங்க தலைவர் வெங்கிடசுப்பு தெரிவித்தார்.
இதனிடையே விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தில்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக கோவை உக்கடம் பணிமனை முன்பாக போக்குவரத்துக் கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, விவசாயிகளின் பிரச்சனைக்கு தீர்வு காண மத்திய, மாநில அரசுகள் தவறி விட்டன. விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு உடனடியாக தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.