கோவையில் முதல் முறையாக மகளிர் சுய உதவிக் குழுவிற்கு நமோ ட்ரோன் தீதி திட்டத்தின் கீழ் ட்ரோன் வழங்கப்பட்டது

கோவை மாவட்டத்தில் முதல் முறையாக நமோ ட்ரோன் தீதி திட்டத்தின் கீழ் பத்ரகாளி அம்மன் மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த வசந்தாமணிக்கு ட்ரோன் வழங்கப்பட்டது. இது விவசாயத்திற்குப் பயன்படுத்தப்படும்.



Coimbatore: கோவை மாவட்டத்தில் முதல் முறையாக நமோ ட்ரோன் தீதி திட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த பெண்ணுக்கு ட்ரோன் வழங்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சரவை அறிவித்த நமோ ட்ரோன் தீதி திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் 15,000 ட்ரோன்கள் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட உள்ளன. இதற்காக 1261 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக, நாடு முழுவதும் 1095 மகளிர் சுய உதவிக் குழுப் பெண்களுக்கு விவசாயத்திற்குப் பயன்படுத்தக்கூடிய ட்ரோன் பயிற்சி மற்றும் உரிமம் வழங்கப்பட்டுள்ளது.



தமிழ்நாட்டில் 44 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு பயிற்சி மற்றும் உரிமம் வழங்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி (வடக்கு) வட்டாரம் ராமபட்டினம் ஊராட்சியில் செயல்பட்டு வரும் பத்ரகாளி அம்மன் மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த வசந்தாமணிக்கு ட்ரோன் பயிற்சி மற்றும் உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இந்த ட்ரோனின் மதிப்பு சுமார் 6 முதல் 8 லட்சம் ரூபாய் ஆகும்.



வசந்தாமணி தனது பகுதியில் இயற்கை விவசாயம் செய்து வருகிறார். அவருக்கு சென்னையில் ட்ரோன் பயிற்சியும், உரிமமும் வழங்கப்பட்டுள்ளது. இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்ப்புக் கூட்டத்தில் கலந்து கொண்ட அவர், மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் ட்ரோனை இயக்கிக் காண்பித்தார்.

இந்த ட்ரோன் மூலம் வயல்வெளிகளில் திரவ உரங்கள், இயற்கை சார்ந்த மீன் அமிலம் போன்ற பொருட்களைத் தெளிக்க முடியும். மேலும், இந்த ட்ரோனை விவசாயிகளுக்கு வாடகைக்கு விடலாம். இதன் மூலம் மகளிர் சுய உதவிக் குழுவிற்கும், PLF கூட்டமைப்பிற்கும் வருமானம் கிடைக்கும். அதே நேரத்தில் விவசாயிகளுக்கும் இது மிகவும் பயனுள்ளதாக அமையும்.

Newsletter

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...