கோவை செல்வபுரத்தில் கஞ்சா விற்ற பெண் கைது: 200 கிராம் கஞ்சா பறிமுதல்

கோவை செல்வபுரத்தில் ரோந்து பணியின் போது சந்தேகத்தின் பேரில் விசாரித்தபோது, 49 வயது பெண் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.


கோவை: கோவை செல்வபுரம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

செல்வபுரம் போலீசார் நேற்று (ஜூலை 25) வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கல்லாபுரம் தெற்கு ஹவுசிங் யூனிட் அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றிருந்த ஒரு பெண்ணை போலீசார் நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையின் போது, அந்தப் பெண் முரண்பட்ட பதில்களை அளித்ததால் சந்தேகமடைந்த போலீசார், மேலும் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. உடனடியாக போலீசார் அவரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர் செல்வபுரம் தெற்கு ஹவுசிங் யூனிட்டைச் சேர்ந்த சாகுல் ஹமீத் என்பவரின் மனைவி பர்ஹத் நிஷா (49) என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 200 கிராம் கஞ்சா மற்றும் ஒரு செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த வழக்கில் தொடர்புடையதாக கருதப்படும் பர்ஹத் நிஷாவின் மகன் அப்துல் கலாம் (25) மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தற்போது அவரை தேடி வருகின்றனர்.

Newsletter

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...