MYV3ADS நிறுவன உரிமையாளர் சக்தி ஆனந்தனின் ஜாமின் மனு தள்ளுபடி: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை உயர்நீதிமன்றம் MYV3ADS நிறுவன உரிமையாளர் சக்தி ஆனந்தனின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது. 69 லட்சம் மக்களை பாதித்த இந்த மோசடி வழக்கில் சக்தி ஆனந்தன் ஏற்கனவே சரணடைந்திருந்தார்.


MYV3ADS நிறுவன உரிமையாளர் சக்தி ஆனந்தனின் ஜாமின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி டிவி தமிழ்ச்செல்வி இந்த உத்தரவை பிறப்பித்தார்.

MYV3ADS செயலியில் வீடியோ பார்த்தால் 5 ரூபாய் முதல் 1500 ரூபாய் வரை கிடைக்கும் என்று கூறி வாடிக்கையாளர்களிடம் மோசடி செய்ததாக கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகார் தொடர்பாக கோவையைச் சேர்ந்த MYV3ADS செயலி நிறுவன உரிமையாளர் சக்தி ஆனந்தன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, பின்னர் அந்த வழக்கு சென்னை பொருளாதார குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கில் ஏற்கனவே நீதிமன்றம் சக்தி ஆனந்தனை, சென்னை நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைய உத்தரவிட்டிருந்தது. அதன்படி, சக்தி ஆனந்தன் கடந்த ஜூலை 5 ஆம் தேதி சென்னை நிதிநிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி மலர் வாலன்டினா முன்பு சரணடைந்தார்.

பின்னர், இந்த வழக்கில் மீண்டும் ஜாமின் கோரி சக்தி ஆனந்தன் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு ஜூலை 26 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, 69 லட்சம் மக்கள் இந்த செயலியால் பாதிப்புக்கு உள்ளானதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், MYV3ADS நிறுவன உரிமையாளர் சக்தி ஆனந்தனின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி டிவி தமிழ்ச்செல்வி உத்தரவிட்டார். இந்த உத்தரவு மூலம், சக்தி ஆனந்தன் தொடர்ந்து சிறையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...