கோவையில் தேசிய கார் பந்தய சாம்பியன்ஷிப்: இரு நாட்கள் நடைபெறும் 'கோயம்புத்தூர் ராலி'

கோவையில் புளூ பேண்ட் எப்.எம்.எஸ்.சி.ஐ. இந்திய தேசிய ராலி சாம்பியன்ஷிப் 2024-ன் 3ம் சுற்று ஜூலை 27, 28 தேதிகளில் நடைபெறுகிறது. 8 பிரிவுகளில் போட்டிகள் நடைபெறும் இந்த நிகழ்வில் பொதுமக்கள் இலவசமாக பங்கேற்கலாம்.



கோவை: கோவையில் புளூ பேண்ட் எப்.எம்.எஸ்.சி.ஐ. இந்திய தேசிய ராலி சாம்பியன்ஷிப் 2024-ன் 3ம் சுற்று - ராலி ஆப் கோயம்புத்தூர் வரும் சனி, ஞாயிறு என இரு நாட்கள் கார் துறை சார்ந்த விளையாட்டு பிரியர்களுக்கு விருந்தாக நடைபெறவுள்ளது. இந்த எப்.எம்.எஸ்.சி.ஐ. சாம்பியன்ஷிப் நிகழ்வுகளுக்கு 2022-26 ஆண்டுகாலம் வரை கோவையில் செயல்படும் புளூ பேண்ட் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வ ப்ரோமோட்டராக உள்ளது.

இந்த சாம்பியன்ஷிப் சுற்றின் முதல் சுற்று சென்னையிலும் இரண்டாம் சுற்று நாசிக்கிலும் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. கோவையில் 3ம் சுற்று ஜூலை 27 (சனி) மற்றும் ஜூலை 28 (ஞாயிறு) நடைபெறுகிறது. இதன் துவக்க விழா, வெள்ளி (26.7.2024) கோவை ஜென்னிஸ் கிளப் வளாகத்தில் நடைபெறுகிறது.

இதில் கோவை மாநகர காவல் துறைஆணையர், V. பாலகிருஷ்ணன் IPS அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, கவுரவ விருந்தினர், எஸ்.என்.ஆர். அறக்கட்டளையின் இணை நிர்வாக அறங்காவலர் R. சுந்தர், கோவை ஆட்டோ ஸ்போர்ட்ஸ் கிளப் உறுப்பினர்கள், போட்டியாளர்கள், ஓட்டுனர்கள், மற்றும் புளூ பேண்ட் பிரதிநிதிகள் முன்னிலையில் இந்த நிகழ்ச்சியை கொடி அசைத்து துவக்கி வைப்பார்.

இந்த 2-நாள் கார் ராலியில் மொத்தம் 8 ஐ.என்.ஆர்.சி. (INRC) போட்டி பிரிவுகள் உள்ளன: ஐ.என்.ஆர்.சி., ஐ.என்.ஆர்.சி. 2., ஐ.என்.ஆர்.சி. 3., ஜூனியர் ஐ.என்.ஆர்.சி., ஐ.என்.ஆர்.சி-பெண்கள் பிரிவு, ஜிப்சி பிரிவு, கிளாசிக் கார் பிரிவு மற்றும் SUV கார் பிரிவுகள். இந்த 8 பிரிவுகளில் போட்டி இரண்டு தினங்கள் நடைபெறுகிறது. மொத்தம் 8 சுற்றுக்கள் (Stages) இதில் இடம் பெறும். இந்த ராலியில் மொத்தம் 269.38 கிலோ மீட்டர் தொலைவு உள்ளடங்கும்.

முதல் நாள் நிகழ்வுகளுக்கான போட்டிகள் L&T சாலை அருகே உள்ள SM அக்ரோ வளாகத்திலும் இரண்டாம் நாளுக்கான போட்டிகள் கோவையை அடுத்த கேத்தனூர் பகுதியிலும் நடக்கிறது. முதல் நாள் போட்டிகள் காலை 8.30 மணிக்கு துவங்கி மாலை 5 மணி வரை நடைபெறும். இதில் 1-6 சுற்றுகள் நடைபெறும். வெற்றி பெறும் வீரர்களுக்கு ரூ.9.35 லட்சம் அளவிலான பரிசு தொகையை அறிவிக்கப்பட்டுள்ளது. வெற்றியாளர்கள் கௌரவிக்கப்படும் நிகழ்ச்சி நடுப்பாளையம் பிரிவில் உள்ள ஜெயம் மஹாலில் நடைபெறும். கோவையில் நடைபெறும் சாம்பியன்ஷிப் போட்டியை பொதுமக்கள் இலவசமாக நேரில் பார்த்து ரசிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ராலியின் முடிவுகளை https://live.chronopulse.com/ என்ற இணையத்தளத்தில் போட்டியின் ஒவ்வொரு நாள் முடிவிலும் பார்க்க முடியும். புளூ பேண்ட் எப்.எம்.எஸ்.சி.ஐ. இந்திய தேசிய ராலி சாம்பியன்ஷிப்-ன் 4 ஆம் சுற்று ஹைதராபாத்தில் அக்டோபர் மாதத்தில், 5 ஆம் சுற்று குடகில் நவம்பரிலும், 6 ஆம் சுற்று பெங்களூரில் டிசம்பர் மாதத்தில் நடைபெறும்.

Newsletter

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...

கோவை பீளமேடு 27-வது வார்டில் ரேஷன் கடை மற்றும் தூய்மைப் பணிகள் கவுன்சிலர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 27-வது வார்டு பகுதிகளில் பல்வேறு மக்கள் ந...