பில்லூர் அணையின் நீர்மட்டம் உயர்வு: பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு - மக்களுக்கு எச்சரிக்கை

பில்லூர் அணையின் நீர்மட்டம் 97 அடியாக உயர்ந்ததால், 20,000 கன அடி தண்ணீர் பவானி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. ஆற்றங்கரையில் வசிப்பவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்ததால், பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆற்றங்கரையில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு பில்லூர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக அணை முழு கொள்ளளவை எட்டியது. தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மாவட்டம் அப்பர் பவானி, அவலாஞ்சி, குந்தா மற்றும் கேரளாவின் அட்டப்பாடி மன்னார்காடு உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக, நேற்று இரவு முதல் பில்லூர் அணைக்கான நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது. ஜூலை 26 காலை நிலவரப்படி சுமார் 20,000 கன அடி தண்ணீர் வரத் தொடங்கியது. நேற்று வரை 85 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இன்று காலை 93 அடியாக உயர்ந்து, பின்னர் 97 அடியை எட்டியது.



அணையின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, அணைக்கு வரும் 20,000 கன அடி தண்ணீர் முழுவதுமாக பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.



வெள்ளப்பெருக்கு காரணமாக, ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், ஆற்றில் தண்ணீர் அதிக அளவில் வருவதால், ஆற்றில் இறங்கி குளிக்கவோ துணி துவைக்கவோ வேண்டாம் என்று மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாவட்ட நிர்வாகம் வருவாய்த்துறை மூலம் தொடர்ந்து மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...