நீலகிரியில் வீட்டின் கூரையை உடைந்து உள்ளே விழுந்த குட்டி யானை

நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே வீட்டின் கூரையை உடைந்து குட்டி யானை வீட்டுக்குள் விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே கோழிபாலம் பகுதியில் வசித்துவருபவர் தவுபிக், இவரது மனைவி ஜெமீலா. அப்பகுதயில் சாலையோர மலைச் சரிவுக்குட்பட்டு வனப் பகுதியில் இத்தம்பதியினரின் வீடு உள்ளது.

இந்நிலையில், நேற்று அதிகாலை 5 மணியளவில் இவர்கள் உறங்கிக்கொண்டிருக்கையில் திடீரென வீட்டின் கூரையை உடைத்து ஒரு யானைக் குட்டி உள்ளே விழுந்துள்ளது. இதனைக்கண்ட ஜெமீலா அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டுள்ளார். 



இதனிடையே வீட்டுக்குள் விழுந்த குட்டி யானை, வீட்டை விட்டு வெளியேற முறச்சித்து அங்கும் இங்கும் ஓடியுள்ளது. இதில் ஜெமிலாவிற்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளது. 



இந்நிலையில், தனது குட்டியை தேடி வந்த தாய் யானை, மேலும் சில யானைகளுடன் வீட்டின் வெளியே நின்றது. யானைக் கூட்டத்தைப் பார்த்து பதற்றமடைந்த ஜெமீலா மற்றும் அவரது மாமனார், மாமியார் மற்றும் 3 குழந்தைகள் வீட்டில் இருந்து வெளியேறி அருகில் உள்ள வீடுகளில் தஞ்சமடைந்தனர்.



வெளியே நின்ற யானைக் கூட்டம், வீட்டின் சமையல் அறைக் கதவை உடைத்து உள்ளே சென்று தனது குட்டியை மீட்டது. தொடர்ந்து, அந்த யானைக் கூட்டம் அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றுவிட்டன.



இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனச்சரகர் கணேசன் மற்றும் வன ஊழியர்கள் ஜெமீலாவின் வீட்டை ஆய்வு செய்தனர். பின், கூடலூர் மருத்துவமனையில் காயமடைந்த ஜெமீலா அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...