தேர்தலில் செந்தில் பாலாஜி இருந்தால் பலமாக இருக்கும்: அமைச்சர் முத்துசாமி

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் சிறுதானிய உணவகத்தை திறந்த பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் முத்துசாமி, செந்தில் பாலாஜி குறித்தும், வீடு கட்டும் திட்டம் பற்றியும் கருத்து தெரிவித்தார்.


கோவை: கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மகளிர் சுய உதவி குழு சார்பில் அமைக்கப்பட்டுள்ள சிறுதானிய உணவகத்தை திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் முத்துசாமி, பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து கருத்து தெரிவித்தார்.



வீடு கட்டும் திட்டம் குறித்து பேசிய அவர், "எளிய மக்கள் காலதாமதமின்றி வீடு கட்டுவதற்காக உடனடி அனுமதி கிடைப்பதற்காக இத்திட்டத்தை முதல்வர் துவக்கியுள்ளார். இதில் சதுர அடிக்கு இரு மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக அதிமுகவினர் கூறுவது தவறு. முன்பு போல அனுமதி வாங்கும் நடைமுறை இருந்தால் மக்களுக்கு எவ்வளவு அலைச்சல், எவ்வளவு செலவு ஆகியிருக்கும் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். அதிக கட்டணம் இருந்தால் முதல்வர் ஆய்வு செய்வார். ஆனால் அப்படி எதுமில்லை," என்றார்.

செந்தில் பாலாஜி குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர், "வருகின்ற தேர்தலில் செந்தில் பாலாஜி இருந்தால் பலமாக தான் இருக்கும். அவர் இப்போது சிறையில் இருப்பது எங்களுக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் வருத்தம் தான்," என்று கூறினார்.

துணை முதல்வர் பதவி குறித்த கேள்விக்கு பதிலளித்த முத்துசாமி, "இது எங்கள் கட்சி. யாருக்கும் துணை முதல்வர் பதவி கொடுக்க வேண்டும் என்பதில் நாங்கள் தான் முடிவு செய்வோம்," என தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...