பொள்ளாச்சி தெற்கு ஊராட்சி ஒன்றியத்தின் தொண்டாமுத்தூரில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் கலந்துகொண்டு மனுக்களை அளித்தனர்.
கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி தெற்கு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தொண்டாமுத்தூர் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் இன்று (ஜூலை 26) நடைபெற்றது.
இந்த முகாமில் தளவாய்பாளையம், பழையூர், எஸ்.நல்லூர், வீரப்பட்டி, தொண்டாமுத்தூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். பங்கேற்ற பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் வருவாய்த்துறை, வேளாண்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர். மக்களின் கோரிக்கைகளை நேரடியாக கேட்டறிந்து, அவற்றை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க இந்த முகாம் உதவியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த முகாமில் தளவாய்பாளையம், பழையூர், எஸ்.நல்லூர், வீரப்பட்டி, தொண்டாமுத்தூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். பங்கேற்ற பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் வருவாய்த்துறை, வேளாண்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர். மக்களின் கோரிக்கைகளை நேரடியாக கேட்டறிந்து, அவற்றை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க இந்த முகாம் உதவியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.