அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகளுக்கு கோடை விடுமுறை வழங்கிடக்கோரி தமிழ்நாடு அரசு அங்கன்வாடி பணியாளர்கள் சங்க ஊழியர்கள் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
அம்மனுவில், கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில் இன்று முதல் பள்ளிகள் அனைத்திற்கும் விடுமுறை அளிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் 2 முதல் 5 வயதுவரை உள்ள அங்கன்வாடி மையங்களில் பயிலும் குழந்தைகளுக்கு கோடை விடுமுறை குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்போது சிறார்களுக்கு காய்ச்சல், வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகள் ஏற்பட அதிக வாய்புள்ளன. கோடை விடுமுறை என்பதே குழந்தைகள் மற்றவர்களுடன் விளையாடி மகிழ அளிக்கப்படும் விடுமுறை காலம். எனவே, அங்கண்வாடியில் பயிலும் குழந்தைகளுக்கு கோடை விடுமுறை அளித்திட அரசு உத்தரவிட வேண்டும்" இவ்வாறு தமிழ்நாடு அரசு அங்கன்வாடி பணியாளர்கள் சங்க ஊழியர்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்மனுவில், கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில் இன்று முதல் பள்ளிகள் அனைத்திற்கும் விடுமுறை அளிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் 2 முதல் 5 வயதுவரை உள்ள அங்கன்வாடி மையங்களில் பயிலும் குழந்தைகளுக்கு கோடை விடுமுறை குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்போது சிறார்களுக்கு காய்ச்சல், வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகள் ஏற்பட அதிக வாய்புள்ளன. கோடை விடுமுறை என்பதே குழந்தைகள் மற்றவர்களுடன் விளையாடி மகிழ அளிக்கப்படும் விடுமுறை காலம். எனவே, அங்கண்வாடியில் பயிலும் குழந்தைகளுக்கு கோடை விடுமுறை அளித்திட அரசு உத்தரவிட வேண்டும்" இவ்வாறு தமிழ்நாடு அரசு அங்கன்வாடி பணியாளர்கள் சங்க ஊழியர்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.