கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலம், 78-வது வார்டுக்குட்பட்ட செல்வபுரம், நாடார் காலனி பகுதியில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருவதையும், மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை பிரித்தெடுக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதையும் கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதனைத்தொடர்ந்து, மாநகராட்சி கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடுவீடாகச் சென்று அபேட் மருந்தினை தண்ணீர் தொட்டிகளில் ஊற்றுவதையும், தேவையற்ற பொருட்களை அகற்றும் பணியினையும், பொதுமக்கள் தேக்கி வைத்துள்ள நீரில் கொசுப் புழுக்கள் உள்ளனவா என்றும் க.விஜயகார்த்திகேயன் ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள மாநகராட்சிப் பூங்காவினையும், நாடார் காலனி பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள குடிநீர் பிரதான குழாயில் நீர்கசிவு ஏற்பட்டுள்ளதையும் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையர், நீர்கசிவை உடனடியாக சரிசெய்யுமாறு சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார்.

இந்நிகழ்வுகளின் போது, மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலருடன் நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், தெற்கு மண்டல உதவி ஆணையர் ரவி, மாநகராட்சிப் பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.


இதனைத்தொடர்ந்து, மாநகராட்சி கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடுவீடாகச் சென்று அபேட் மருந்தினை தண்ணீர் தொட்டிகளில் ஊற்றுவதையும், தேவையற்ற பொருட்களை அகற்றும் பணியினையும், பொதுமக்கள் தேக்கி வைத்துள்ள நீரில் கொசுப் புழுக்கள் உள்ளனவா என்றும் க.விஜயகார்த்திகேயன் ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள மாநகராட்சிப் பூங்காவினையும், நாடார் காலனி பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள குடிநீர் பிரதான குழாயில் நீர்கசிவு ஏற்பட்டுள்ளதையும் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையர், நீர்கசிவை உடனடியாக சரிசெய்யுமாறு சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார்.

இந்நிகழ்வுகளின் போது, மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலருடன் நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், தெற்கு மண்டல உதவி ஆணையர் ரவி, மாநகராட்சிப் பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
