மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பு: திருப்பூரில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்

திருப்பூரில் குமரன் சிலை முன்பு 1000க்கும் மேற்பட்ட திமுகவினர் மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். பொள்ளாச்சி எம்பி ஈஸ்வரசாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் உள்ளூர் பிரமுகர்கள் பங்கேற்றனர்.


திருப்பூர்: திருப்பூரில் மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். குமரன் சிலை முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.



பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ், மாநகராட்சி மேயர் தினேஷ் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.



ஜிஎஸ்டி வரி மூலம் அதிக நிதி பெறும் மத்திய அரசு தமிழகத்திற்கு உரிய நிதியை ஒதுக்க மறுத்து வருவதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம்சாட்டினர். மேலும், மதுரையில் அமையும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இந்த ஆண்டும் நிதி ஒதுக்கப்படவில்லை என்றும், தமிழகத்திற்கு புதிய ரயில் திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழகம் முழுமையாக புறக்கணிக்கப்பட்டுள்ளதாக கூறி, மத்திய அரசின் செயல்பாடுகளை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

Newsletter

வால்பாறையில் பயங்கர விபத்து: கார் மோதி பெண் படுகாயம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. படுகாய...

வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய பதைபதைப்பு சம்பவம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. சிசிடி...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...