அமைச்சர் சு.முத்துசாமி ஒண்டிப்புதூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இலவச மிதிவண்டிகள் வழங்கினார்

கோவை ஒண்டிப்புதூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஜூலை 26ஆம் தேதி 11ம் வகுப்பு மாணவர்களுக்கு அமைச்சர் சு.முத்துசாமி இலவச மிதிவண்டிகளை வழங்கினார். மாவட்ட நிர்வாக அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.


கோவை: கோவை திருச்சி சாலையில் உள்ள ஒண்டிப்புதூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி ஜூலை 26 அன்று நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு வீட்டுவசதித்துறை, நகர்ப்புற வளர்ச்சித் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்து கொண்டு 11ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகளை வழங்கினார்.



இந்த நிகழ்வில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி ஆணையாளர் மா சிவகுரு பிரபாகரன், மாநகர மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் (முன்னாள் எம்.எல்.ஏ.), தலைமை செயற்குழு உறுப்பினர் ஏர்போர்ட் ராஜேந்திரன், மாநகராட்சி துணை மேயர் இரா.வெற்றிச்செல்வன், பொதுக்குழு உறுப்பினர் ஆடிட்டர் சசிகுமார், சிங்காநல்லூர் பகுதி-1 செயலாளர் எஸ்.எம்.சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், மாநகராட்சி கிழக்கு மண்டலத் தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக், மாமன்ற உறுப்பினர்கள் சாந்தா மணி பன்னீர்செல்வம், சுமித்ரா தீபக், பகுதி துணைச் செயலாளர் கஸ்தூரி அருண், வட்டக் கழகச் செயலாளர்கள் சுரேஷ் குமார், எல்.பி.எஃப் சண்முகம், ராஜேந்திரன், தி.இளங்கோவன், நெசவாளர் அணி விஸ்வநாதன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள், பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரின் OSD நியமனம் ரத்து: தமிழக அரசு உத்தரவு

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரான ரிக்கே ராதன் பண்டிட் வெற்றிவேலின் அரசியல் OSD நியமனத்தை, கடும் எதிர்ப்புகள் மற்றும் விமர்ச...

பொதுமக்களை விரட்டிய காங்கேயம் காளை; மரத்தில் ஏறி உயிர்தப்பிய வாலிபர்கள்.

கோவை உக்கடம் வாளாங்குளம் பகுதியில் நேற்று இரவு சுற்றித் திரிந்த காங்கேயம் காளை ஒன்று திடீரென பொதுமக்களை விரட்டியதில், பய...

கோவை வடக்கு-பீளமேடு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணி வைத்த இருவர் கைது

கோவை வடக்கு மற்றும் பீளமேடு ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணியை வைத்த வழக்கில் ரயில்வே பாதுகாப்புப்...

வீட்டில் கஞ்சா செடி வளர்த்த நபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் (52) தனது வீட்டில் கஞ்சா செடி வளர்த்ததோடு, 4 கிலோ கஞ்சா வ...

பொள்ளாச்சி ஆழியாறு பகுதியில் மது போதையில் தள்ளி இளைஞர் கொலை - குற்றவாளி கைது

பொள்ளாச்சி வட்டம் ஆழியாறு நெல்லித்துறை பகுதியில் குடும்ப பூசல் காரணமாக மது போதையில் வந்த ஆனந்த் என்பவர் பாலகிருஷ்ணனை தள்...